இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? | பிளாஷ்பேக்: உண்ணாவிரதம் இருந்து வெள்ளித்திரையின் உச்சம் தொட்ட பி யூ சின்னப்பா |

கடந்த 2021ல் கன்னடத்தில் வெளியான காந்தாரா திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் கதாநாயகனாக நடித்திருந்த ரிஷப் ஷெட்டியே இந்த படத்தை இயக்கியும் இருந்தார். கிராமங்களில் உள்ள காவல் தெய்வங்களை மையப்படுத்தி, பூர்வகுடிகளின் நில உரிமை பற்றி பேசி இருந்த இந்தப்படம் கன்னடத்தில் மட்டுமல்லாது தமிழ், மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு எல்லா இடங்களிலும் வரவேற்பை பெற்றது
குறிப்பாக இந்த படத்தில் இரண்டு கதாபாத்திரங்களில் நடித்த ரிஷப் ஷெட்டி, கர்நாடகாவில் பிரசித்தி பெற்ற தெய்வ கோலா (பூத கோலா) என்கிற பண்டிகையின் போது சாமி ஆடுபவராக கொஞ்ச நேரமே வந்து செல்லும் கதாபாத்திரம் ரசிகர்களை மிகவும் கவர்ந்தது. அதுமட்டுமல்ல படத்தில் அவர் நடித்த அந்த தெய்வ கோலா நிகழ்ச்சியும் அதன் பின்னணியில் ஒலித்த பாடலும் இசையும் ரசிகர்களை மெய் மறக்க செய்தது.
இந்த நிலையில் தற்போது மங்களூரில் அதேபோன்று சமீபத்தில் நடைபெற்ற தெய்வ கோலா நிகழ்ச்சியில் ரிஷப் ஷெட்டி நேரில் கலந்து கொண்டார்.. இதுகுறித்த புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.