விஜய் நடித்த 'உன்னை நினைத்து' காட்சிகளைப் பகிர்ந்த விக்ரமன் | ஜன.,10க்கு தள்ளிப்போகிறதா 'ஜனநாயகன்'? | 'அகண்டா 2' மாதிரி ஆகிடுமா ஜனநாயகன் | ஜனவரி 30ல் வெளியாகும் ஜீத்து ஜோசப் படம் | நஷ்டமடைந்த 'ஏஜென்ட்' பட தயாரிப்பாளர், வினியோகஸ்தர்களுக்கு அகில் கொடுத்த வாக்குறுதி | ஆயிரம் படங்களில் நடித்த மூத்த மலையாள நடிகர் காலமானார் | 'மன சங்கர வர பிரசாத் காரு' படத்தின் மெகா புரமோஷனில் சிரஞ்சீவி கலந்து கொள்வாரா? | மூன்று வருடங்களுக்குப் பிறகு விஜய் பட நடிகையிடம் மன்னிப்பு கேட்ட புஷ்பா நடிகை | மீண்டும் சந்தித்த 'படையப்பா' படை | திரைப்பட பாடலாக உருவான சீமானின் மேடை பாட்டு |

கேரள மாநிலம் கோட்டையத்தில் பிறந்தவர் பாபு நம்பூதிரி. கல்லூரி பேராசிரியாக பணியாற்றினார். கல்லூரி நாடகங்களில் நடிக்கத் தொடங்கியவர் பின்னர் வெளி நாடகங்களிலும் நடித்தார். அப்படியே சினிமாவுக்கும் வந்து விட்டார். கடந்த 40 வருடங்களாக வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் 215க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார். மம்முட்டியின் 'நிறக்கூட்டு', மோகன்லாலில் தூவானதும்பிகள், நிறக்கூட்டு, ஜாக்ரதா, பெருதச்சன், கேரள கபே அவர் நடித்த முக்கியமான படங்கள்.
74 வயதான பாபு நம்பூரி தற்போது சினிமாவில் இருந்து விலகி கோட்டயம் குரவிலங்காடு பகுதியிலுள்ள கணபதி கோயிலில் பூசாரியாகவும் பணியாற்றுகிறார். பல ஆண்டுகளாக வோவிலின் வராதபோது, பூசாரி பொறுப்பை ஏற்று நடத்திய பாபு நம்பூதிரி இப்போது முழுநேர பூசாரி ஆகிவிட்டார்.
இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: எங்கள் குடும்பமே இறைவனுக்கு சேவை செய்யும் நம்பூதிரி குடும்பம். நான் பள்ளியில் படிக்கும்போதே பூஜைகள் பற்றி தெரிந்துகொண்டேன். நம்பூதிரி சமூகத்தில் இப்போது சிலருக்கு பூஜைகள் செய்ய தெரிகிறது. ஆனால், அடுத்த தலைமுறைக்கு இதில் விருப்பம் இல்லை என்பது வருத்தமாக இருக்கிறது. என்கிறார்.