ஒரே காரில்... ஒரே கலரில்...: ஜோடியாக திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற விஜய், திரிஷா | சாரா அர்ஜுனின் வளர்ச்சி பெருமையாக உள்ளது! - சொல்கிறார் இயக்குனர் ஏ.எல்.விஜய் | விஜய்யின் ஜனநாயகனுக்கு மார்ச் 17ல் சென்சார் சான்றிதழ்! | லெஜெண்ட் சரவணனின் 'லீடர்' படத்தின் டீசர் வெளியானது! | சிக்ஸ் பேக் விபரீதமான முயற்சி! - நடிகர் பரத் | மார்ச் 27ம் தேதியன்று திரைக்கு வரும் ஹாப்பி ராஜ்! | சொன்ன தேதிக்கு முன்பே திரைக்கு வருகிறது 'உஸ்தாத் பகத்சிங்' | 3 வருடங்களுக்கு பிறகு நாயகியாக நடிக்கும் ரைசா வில்சன் | ஆங்கிலோ இந்திய பெண்ணாக நடிக்கும் ப்ரீத்தி முகுந்தன் | நடிகர் ஆனார் அஜித் அண்ணன் |

கேரள மாநிலம் கோட்டையத்தில் பிறந்தவர் பாபு நம்பூதிரி. கல்லூரி பேராசிரியாக பணியாற்றினார். கல்லூரி நாடகங்களில் நடிக்கத் தொடங்கியவர் பின்னர் வெளி நாடகங்களிலும் நடித்தார். அப்படியே சினிமாவுக்கும் வந்து விட்டார். கடந்த 40 வருடங்களாக வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் 215க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார். மம்முட்டியின் 'நிறக்கூட்டு', மோகன்லாலில் தூவானதும்பிகள், நிறக்கூட்டு, ஜாக்ரதா, பெருதச்சன், கேரள கபே அவர் நடித்த முக்கியமான படங்கள்.
74 வயதான பாபு நம்பூரி தற்போது சினிமாவில் இருந்து விலகி கோட்டயம் குரவிலங்காடு பகுதியிலுள்ள கணபதி கோயிலில் பூசாரியாகவும் பணியாற்றுகிறார். பல ஆண்டுகளாக வோவிலின் வராதபோது, பூசாரி பொறுப்பை ஏற்று நடத்திய பாபு நம்பூதிரி இப்போது முழுநேர பூசாரி ஆகிவிட்டார்.
இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: எங்கள் குடும்பமே இறைவனுக்கு சேவை செய்யும் நம்பூதிரி குடும்பம். நான் பள்ளியில் படிக்கும்போதே பூஜைகள் பற்றி தெரிந்துகொண்டேன். நம்பூதிரி சமூகத்தில் இப்போது சிலருக்கு பூஜைகள் செய்ய தெரிகிறது. ஆனால், அடுத்த தலைமுறைக்கு இதில் விருப்பம் இல்லை என்பது வருத்தமாக இருக்கிறது. என்கிறார்.




