பிளாஷ்பேக்: பி யு சின்னப்பா திரைப்படத்தில் பிரியமுடன் எம் ஜி ஆருக்கு வாய்ப்பளித்த இயக்குநர் கிருஷ்ணன் | ஏப்ரல் 10 கருப்பு ரிலீசா... : ஆர்.ஜே பாலாஜி தந்த அப்டேட் | மீண்டும் ஆஸ்கர் மேடையில் பிரியங்கா சோப்ரா | விடியலாக முழு வீடியோ வரும் : திரிஷாவுக்கு வாழ்த்துகள் கூறி பார்த்திபன் சஸ்பென்ஸ் | என் மீது திட்டமிட்டு தாக்குதல் : பிரியங்கா மோகன் | சம்பளத்தை குறைக்காத அஜித்: இன்னமும் சிக்காத தயாரிப்பாளர்கள் | மீடியாவை சந்தித்து பேசுகிறார் சங்கீதா? | 10 நாளில் 50 கோடி வசூலித்த ‛தாய் கிழவி' | சன்னி தியோலின் லாகூர் 1947 பட டைட்டில் மாற்றம் ? | தலைவா படத்தில் பிரச்னைக்குரிய வார்த்தைகளை சேர்த்தது யார்? : சஸ்பென்ஸ் உடைத்த இயக்குனர் விஜய் |

கொரோனாவால் வாழ்வாதாரத்தை இழந்த பாலிவுட் திரைப்பட தொழிலாளர்களுக்கு பாலிவுட் நடிகர்கள் ஏராளமான உதவிகள் செய்து வருகிறார்கள். அதில் முன்னணியில் இருப்பவர்கள் அக்ஷய்குமாரும், சோனு சூட்டும். அக்ஷய் குமார் கொரோனா முதல் அலையின்போது சுமார் 30 கோடி வரை நிதி உதவி செய்தார். இரண்டாவது அலையிலும் இதுவரை 5 கோடிக்கு மேல் வழங்கி உள்ளார்.
இந்த நிலையில் திரைப்படத் தொழிலாளர்களுக்கு 50 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் பேசியிருப்பதாவது: கொரோனா பெருந்தொற்றுக் காலகட்டம் சினிமா கலைஞர்களுக்குப் பொருளாதாரப் பிரச்சினைகளை ஏற்படுத்தியுள்ளது. தேவையான தருணங்களில் கலைஞர்கள் நாட்டுக்கு ஆதரவாக நிற்கின்றனர். இந்த முக்கியமான காலகட்டத்தில் மக்கள் முன்வந்து அவர்களுக்குத் துணையாக நிற்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். என்று கூறியுள்ளார்.