ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
ஷாரூக்கான், அனுஷ்கா சர்மா, காத்ரினா கைப் நடித்து ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் கடந்த வாரம் வெளிவந்த 'ஜீரோ' படம் பெரிய வெற்றியைப் பெறாதது ஷாரூக் உள்ளிட்ட படக்குழுவினருக்கு அதிர்ச்சியை அளித்துள்ளதாம். இதுவரை சுமார் 60 கோடி வரையில்தான் வசூலித்துள்ளதாக பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சுமார் 200 கோடி ரூபாய் செலவு செய்து எடுக்கப்பட்டுள்ள படம், அந்த வசூலையாவது தொடுமா என்று சந்தேகம் எழுந்துள்ளதாம்.
ஷாரூக் நடித்து கடைசியாக வந்த சில படங்கள் மற்ற பாலிவுட் ஹீரோக்களின் படங்களுடன் ஒப்பிடுகையில் பெரிய வசூல் சாதனையைப் பெறவில்லை. அதனால், தனக்கு அடுத்து ஒரு பெரிய வெற்றி வேண்டும் என அவர் முடிவெடுத்துள்ளாராம். ஏற்கெனவே, 'விக்ரம் வேதா' படத்தின் ரீமேக்கில் அவர் நடிப்பதாகச் சொல்லப்பட்டது.
ஆனால், அதற்காக அவர் இரண்டு கண்டிஷன்களைச் சொல்லியிருந்தார். தமிழில் மாதவன் நடித்த கதாபாத்திரத்தில் அவரே நடிக்க வேண்டும் என்றும், தமிழில் படத்தை இயக்கிய புஷ்கர்-காயத்ரி ஹிந்தியில் இயக்க வேண்டாம் என்றும் சொல்லியிருந்தார். அதனால், அப்படத்தின் ஆரம்பமும் தள்ளிக் கொண்டே போனது.
இப்போது அந்த கண்டிஷன்களை ஷாரூக் மீண்டும் சொல்வாரா, அல்லது அவருடைய முடிவை மாற்றிக் கொண்டு படத்தில் நடிக்க சம்மதிப்பாரா என்பது விரைவில் தெரிய வரும்.