ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பாலிவுட் சூப்பர் நடிகர் ஷாருக்கான் நேற்று முன் தினம் தனது 53வது பிறந்தநாளை கொண்டாடினார். எப்போதுமே தனது நண்பர்களுக்கு இரவு பிறந்தநாள் பார்ட்டி கொடுப்பதை வழக்கமாக வைத்துள்ளார் ஷாருக்கான். அந்தவகையில் மும்பையில் உள்ள பிரபல இரவு விடுதியில் நடைபெற்ற பிறந்தநாள் பார்ட்டியில் தனது ஜீரோ படக்குழுவினர் மற்றும் தனது குடும்பத்தினருடன் கலந்துகொண்டார் ஷாருக்கான்.
ஆனால் நள்ளிரவு தாண்டியும் கொண்டாட்டம் நீண்டுகொண்டே சென்றதுடன், விடுதியில் அதிக சப்தத்தில் ஒலித்த பாடல்கள் பொதுமக்களுக்கு இடையூறாக இருப்பதாக காவல்துறைக்கு புகார் சென்றது. இதையடுத்து அங்கே விரைந்த மும்பை போலீசார் சப்தத்தை குறைக்கும்படி வலியுறுத்தினார்கள். இதனால் அப்செட்டான ஷாருக்கான் உடனே பார்ட்டியில் இருந்து பாதியிலேயே கிளம்பி விட்டாராம்.