ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பிரபல பாலிவுட் நடிகை சோனாலி பிந்த்ரே. தமிழில் காதலர் தினம் படத்தில் நடித்தார். சில காலமாக சினிமாவை விட்டு விலகி இருந்த சோனாலி. திடீரென கடந்த சில தினங்களுக்கு முன்பு தான் கடுமையான புற்று நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாவும், இதற்காக அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அறிவித்தார். இது பாலிவுட்டில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
சோனிலியின் ரசிகர்கள் அவர் குணமடைய பிரார்த்தித்து சமூக வலைத்தளங்களில் தங்கள் வேதனையை வெளிப்படுத்தினார்கள். இதனால் சோனாலி தனது தற்போதைய தோற்றத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டிருப்பதோடு. சவாலான விஷயங்களை தான் சந்தித்து வருவதாகவும், ரசிகர்களின் அன்பால் தைரியமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறியிருப்பதாவது:
நான் விரைவில் குணமடைய ரசிகர்கள் தொடர்ந்து அன்பை வெளிப்படுத்தி வருகிறார்கள். அவர்களுக்கு நன்றி. என் வாழ்க்கையில் நிறைய சவாலான விஷயங்களை இப்போது பார்க்கிறேன். தினமும் ஒரு அனுபவத்தை சந்திக்கிறேன். நேர்மறையான விஷயங்களே இப்போதைய எனது எதிர்பார்ப்பாக உள்ளது. எனது வாழ்க்கை பயணத்தில் இதுவும் ஒரு பகுதியாகி விட்டது. யாரும் எதற்காகவும் நம்பிக்கையை இழந்து விடக்கூடாது. நாம் எந்த நிலைமையில் இருக்கிறோம் என்பதை புரிந்துகொள்வது அவசியம். இந்த மாதிரி கஷ்டமான நேரத்தில் நான் தனியாக இல்லை என்பது மகிழ்ச்சி தருகிறது.
நிறைய பேர் புற்றுநோய் பாதிப்பில் இருந்த அவர்களுடைய அனுபவங்களை என்னுடன் பகிர்ந்துகொண்டார்கள். இன்னும் பலர் தங்களுக்கு நெருக்கமானவர்களுக்கு ஏற்பட்ட புற்றுநோய் பாதிப்பு குறித்த விஷயங்களை சொன்னார்கள். அவர்களுடைய அன்பும், அனுபவமும் எனக்கு கூடுதல் வலிமையை தருகிறது. என்று கூறியிருக்கிறார் சோனாலி பிந்த்ரே.