சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் |
2016ம் ஆண்டு அக்ஷய்குமார் நடித்து வெளிவந்த படம் ருஸ்டம். இதில் அவர் தேசப்பற்று மிக்க இந்திய கப்பல் படை தளபதியாக நடித்திருந்தார். தனக்கு பிடித்த படம் என்று அக்ஷய்குமார் ருஸ்டத்தை குறிப்பிடுவார். அந்தப் படத்தில் தான் நடித்து அணிந்த உடைககளை குறிப்பாக கப்படல் படை தளபதியின் சீருடையை பத்திரமாக வைத்திருந்தார்.
இப்போது அந்த உடைகளை ஏலத்துக்கு கொண்டு வருகிறார். இதன் மூலம் கிடைக்கும் பணத்தை விலங்குகள் பாதுகாப்புக்கு கொடுக்கிறார். இதனை அக்ஷய்குமாரின் மனைவியும், நடிகையுமான டுவிங்கிள் கண்ணா தனது டுவிட்டரில் தெரிவித்திருந்தார். தற்போது அக்ஷய் கண்ணாவும் அதை உறுதிப்படுத்தியிருக்கிறார். அவர் தனது டுவிட்டரில் "சில விஷயங்கள் நமது மனதுக்கு மிகவும் நெருக்கமாகி விடும். அப்படித்தான் நான் நடித்து இருந்த 'ருஷ்டம்' படமும் என்னை ஈர்த்தது. அந்த படத்தில் கப்பல் படை அதிகாரியாக நான் நடித்து இருந்த கதாபாத்திரம் தேசிய விருது பெற்ற உணர்வை ஏற்படுத்தியது. எனவே அதில் அணிந்து இருந்த உடைகளை ஏலம் விட்டு அதில் கிடைக்கும் பணத்தை விலங்குகள் பாதுகாப்புக்கு உதவும் தொண்டு நிறுவனத்துக்கு வழங்க இருக்கிறேன்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.