‛அஞ்சான்' ரீ ரிலீஸில் வெற்றி பெற்றால் அஞ்சான் 2 உருவாகும் : லிங்குசாமி | மீண்டும் ரஜினியுடன் இணைந்த விஜய் சேதுபதி? | ஆண் ஆதிக்கம் இருப்பது கசப்பான உண்மை : கீர்த்தி சுரேஷ் | 'ஆண் பாவம் பொல்லாதது'..... முதல் பட்டியலில் நீளும் ஓடிடி ரிலீஸ்...! | சிக்கலில் இருந்து மீண்ட ‛கருப்பு' | விஜய் தேவரகொண்டா படத்தில் ‛தி மம்மி' பட வில்லன் | லோகேஷ் கனகராஜின் அடுத்த படத்தின் அப்டேட் | கிரிக்கெட்டர் ஸ்ரீகாந்த் மகன் அனிருத்தா உடன் நடிகை சம்யுக்தா திருமணம் | காசியில் தனுஷ்: கங்கைக்கு ஆரத்தி எடுத்து பிரார்த்தனை | ரீரிலீஸ் படத்துக்கு ஆதரவு கொடுக்காத ஹீரோக்கள் |

புதுடில்லி: ஹூண்டாய் காருக்கு விளம்பரம் செய்த பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மற்றும் நடிகை தீபிகா படுகோனே ஆகியோருக்கு சட்ட சிக்கல் எழுந்துள்ளது. இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
ராஜஸ்தானை சேர்ந்த கீர்த்தி சிங் என்ற பெண் 2022ல் ஹூண்டாய் நிறுவனத்தின் அல்காசர் காரை வாங்கி உள்ளார். 6 மாதத்திற்குள் இந்த காரில் நிறைய பிரச்னைகள் வந்ததாக தெரிகிறது. இதனால் ஹூண்டாய் நிறுவனத்தின் மீது வழக்கு தொடர்ந்துள்ளார். அதோடு அந்த காரை விளம்பரப்படுத்திய பாலிவுட் நடிகர்கள் ஷாரூக்கான் மற்றும் தீபிகா படுகோனே மீதும் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என கூறியிருந்தார். பரத்பூர் குற்றவியல் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில், போலீசார் இவர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.