என்னை ஏன் டார்கெட் செய்கிறார்கள் : கயாடு லோஹர் வேதனை | பெரிய சம்பளத்தை மட்டுமே எதிர்பார்த்து நான் நடிப்பதில்லை : தீபிகா படுகோனே விளக்கம் | ரன்வீர், சாரா நடித்துள்ள துரந்தர் பட டிரைலர் வெளியானது | ரஜினி படத்திலிருந்து விலகியதால் மீண்டும் கார்த்தியுடன் இணையும் சுந்தர்.சி | பாலகிருஷ்ணா 111வது படத்தில் ராணி ஆக நயன்தாரா | எம்புரான் விமர்சனம் : பிரித்விராஜ் கருத்து | மீண்டும் காமெடி ஹீரோவான சதீஷ் | ஒரே படத்தின் மூலம் தமிழுக்கு வரும் தெலுங்கு, மலையாள ஹீரோயின்கள் | டேனியல் பாலாஜியின் கடைசி படம்: 28ம் தேதி வெளியாகிறது | பிளாஷ்பேக்: சோகத்தில் வென்ற ரஜினிகாந்தும், தோற்ற விஜயகாந்தும் |

சமீப காலமாக தெரு நாய்களால் பொதுமக்கள் மிகப்பெரிய அளவில் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள். நீதிமன்றத்திலும் ரேபிஸ் வழக்குகள் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் உச்சநீதிமன்றம் டில்லியில் தெரு நாய்களை அப்புறப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது. ஆனால் நீதிமன்றத்தின் இந்த உத்தரவானது விலங்குகள் மீது பிரியம் காட்டி வரும் பிரபலங்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
குறிப்பாக நடிகை ஜான்வி கபூர் இதற்கு எதிராக இன்ஸ்டாகிராமில் தனது ஆட்சேபனையை தெரிவித்திருக்கிறார். அதில், நீதிமன்றத்தின் தீர்ப்பை நாய்களுக்கு மரண தண்டனை என்று அவர் கூறியுள்ளார். இது குறித்து கேள்வி எழுப்பும் ஒரு கடிதத்தையும் அவர் பகிர்ந்து உள்ளார். அவரது கடிதத்தை சினிமா பிரபலங்கள் மற்றும் விலங்குகள் நல ஆர்வலர்களும் ஆதரித்து, இன்று அவை நாய்கள், நாளை யாராக இருக்கும் என்றும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
ஆனால் பிரபலங்களின் இந்த கருத்துக்கு சாதாரண பொதுமக்கள் கடுமையாக எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகிறார்கள். அதில், தெரு நாய்களால் பொதுமக்கள் தினமும் எதிர்கொள்ளும் பிரச்னைகளை பிரபலங்கள் அறிய மாட்டார்கள். குறிப்பாக அவர்கள் தெரு வீதிகளில் இறங்கி நடப்பதில்லை. வீட்டிற்குள் இருந்து காரிலேயே வெளியில் புறப்படுகிறார்கள். ஆனால் தெருவில் நடக்கும் சாதாரண மக்களுக்கு தான் இந்த நாய்களால் ஆபத்து ஏற்படுகிறது. இப்படி ஒவ்வொரு நாளும் நாய்களால் பொதுமக்கள் அவதிப்படுவதை ஜான்வி கபூர் போன்ற பிரபலங்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை என்றும் அவருக்கு எதிராக கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்கள்.