கடந்த 10 ஆண்டில் சினிமா தயாரிப்பாளர்கள் நிலை: இயக்குனர் ஆர்.கே.செல்வமணி கவலை | பணம் சம்பாதிக்க எத்தனையோ தொழில் இருக்குது.. அதுக்கு, ஆபாச படம் எடுக்கலாம்: பொங்கிய பேரரசு | இயக்குனர் ரஞ்சித் மீதான மற்றொரு பாலியல் வழக்கும் தள்ளுபடி | திலீப் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | 'பைசன்' வரவேற்பு: அனுபமா பரமேஸ்வரன் நீண்ட நன்றிப் பதிவு | திரைப்படத் தொழிலாளர்களுக்கும் பங்கு: தெலுங்கானா முதல்வர் அறிவிப்பு | காந்தாரா சாப்டர் 1 : ஆன்லைன் இணையதளத்தில் 14 மில்லியன் டிக்கெட்டுகள் விற்பனை | மீண்டும் மகன் படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்கும் மோகன்லால் ? | கேஜிஎப் ஒளிப்பதிவாளர் திருமணத்தில் கலந்து கொண்ட ஸ்ரீ லீலா | டிவி நிகழ்ச்சியில் சவுந்தர்யாவை நினைத்து கண் கலங்கிய ரம்யா கிருஷ்ணன் |

நாக் அஷ்வின் இயக்கத்தில், பிரபாஸ், தீபிகா படுகோனே, அமிதாப்பச்சன், கமல்ஹாசன் மற்றும் பலர் நடிப்பில் கடந்த வருடம் வெளியாகி 1000 கோடிக்கும் அதிகம் வசூலித்த படம் 'கல்கி 2898 எடி'. அந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு இந்த வருடம் ஆரம்பமாகும் என்றார்கள். அதற்கான வேலைகள் நடந்து வருகின்றன.
இந்நிலையில் படத்திலிருந்து நாயகி தீபிகா படுகோனே விலக வாய்ப்புள்ளதாக பாலிவுட் வட்டாரங்களில் தகவல் பரவி வருகிறது. கடந்த வருடம் குழந்தை பிறந்த பிறகு சினிமாவில் நடிக்க ஆறு முதல் எட்டு மணி நேரம் மட்டுமே வேலை செய்வேன் என தீபிகா 'கண்டிஷன்' போட்டுள்ளாராம். அதன் காரணமாகவும் அவர் நடிக்கவிருந்த 'ஸ்பிரிட்' படத்தில் இருந்து பேச்சுவார்த்தையுடன் விலகினார். அவருக்கும் அப்படத்தின் இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்காவுக்கும் அது தொடர்பாக சண்டை நடந்து அவர் மறைமுகமாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டது வரை நடந்தது.
தற்போது 'கல்கி 2' குழுவினரும் தீபிகாவின் ஆறு முதல் எட்டு மணி நேர வேலையை ஏற்க மறுப்பதாகவும், அவருடைய காட்சிகளைக் குறைக்கலாமா அல்லது முழுவதுவமாக நீக்கிவிடலாமா என யோசிப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளதாகச் சொல்கிறார்கள்.
தீபிகாவின் இந்த குறிப்பிட்ட சில மணி நேர வேலைக்கு பாலிவுட் பிரபலங்கள் சிலர் ஆதரவு தெரிவித்துள்ளார்கள் என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று.




