லோகா ஒளிப்பதிவாளருக்கு விலை உயர்ந்த வாட்ச் பரிசளித்த கல்யாணி பிரியதர்ஷன் | நானி படத்தை இயக்கும் ஓஜி இயக்குனர் ; பூஜையுடன் படம் துவங்கியது | தீவிரமாக களரி பயிற்சி கற்று வரும் இஷா தல்வார் | தொடரும் பட இயக்குனரின் சினிமாட்டிக் யுனிவர்ஸில் ஹீரோவாக நடிக்கும் பிரித்விராஜ் | மகளின் நிர்வாண புகைப்படத்தை அனுப்ப சொன்னார்கள் : அக்ஷய் குமார் அதிர்ச்சி தகவல் | அப்ப தியேட்டரில் ஓடின இப்ப, செல்போனில் ஓடுது : நடிகை லதா | பல ஆண்டுகளுக்குபின் வெளியாகும் கும்கி 2 | விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகாவுக்கு பிப்.,யில் டும் டும் : ரகசியமாய் நடந்ததா நிச்சயதார்த்தம் | விஷ்ணு எடவனை டிக் செய்த விக்ரம் | ஏஐ ஆபத்து, சட்ட நடவடிக்கை தேவை : ஷ்ரத்தா ஸ்ரீநாத். |
தினங்களுக்கு முன்பு காஷ்மீரில் உள்ள பஹல்காமில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலாவுக்காக வந்திருந்த 26 அப்பாவி பயணிகள் கொடூரமாக சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த நிகழ்வு நாடெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனை தொடர்ந்து எதிரிகளுக்கு தக்க பதிலடி தர அரசு தயாராகி வருகிறது. இந்த தாக்குதல் குறித்து திரையுலகை சேர்ந்த பல பிரபலங்களும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் சமீபத்திய நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட பாலிவுட் நடிகர் சோனு சூட் இந்த தாக்குதல் பற்றி கேட்கப்பட்ட போது தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் கூறும்போது, “இது வெறும் பஹல்காம் மீது மட்டும் தொகுக்கப்பட்டுள்ள தாக்குதல் அல்ல.. ஒவ்வொரு இந்தியனின் வாழ்க்கை மீதும் கொடுக்கப்பட்டுள்ள தாக்குதல்.. அந்த சம்பவத்தில் தங்கள் கண்முன்னே தந்தையை இழந்த ஒவ்வொரு குழந்தையையும், தங்களது கணவனை இழந்த ஒவ்வொரு பெண்ணையும் பார்க்கும்போது ஒவ்வொரு இந்தியனின் மனதிலும் தீராத வடுவை ஏற்படுத்தி உள்ளது. இப்போது நாம் எடுத்துக் கொண்டுள்ள இந்த நேரம் கூட, இந்தியா இதற்கு எப்படி தக்க வகையில் பதில் கொடுக்கும் விதமாக எதிர்வினையாற்ற போகிறது என்பதற்காக தான் என்பதை ஒவ்வொருவரும் புரிந்து கொள்வார்கள்” என்று கூறியுள்ளார்.