'டகாய்ட்' பட ரிலீஸை முன்னிட்டு ஹீரோவுடன் திருப்பதி தரிசனம் செய்த மிருணாள் தாக்கூர் | பிளாஷ்பேக்: புரட்சி நடிகரின் படத்தில், புலியுடன் சண்டையிட்ட புரட்சிப் பெண் திரைக்கலைஞர் | கஞ்சா பயன்படுத்தியதாக மலையாள நடிகரின் மகன் கைது ; தந்தையின் நம்பிக்கையை தகர்த்தார் | சென்சார் போர்டின் இரட்டை நிலைப்பாடு ; தி கேரளா ஸ்டோரி இயக்குனர் குற்றச்சாட்டு | துபாயில் சிக்கிக்கொண்ட பாலிவுட் நடிகை ; உதவி கேட்டு பிரதமருக்கு கோரிக்கை | பாடலை மாதக்கணக்கில் மெருகேற்றும் ஹாரிஸ்: இயக்குனர் ஏ.எல்.விஜய் | நடிப்பு உலகில் அடியெடுத்து வைத்த கிரிக்கெட் நடுவர் அனில் சவுத்ரி | ரஜினி, கமல் படத்தில் இந்த இளம் நடிகையா? | 'தனுஷ் 56' படப்பிடிப்பு செப்டம்பரில் துவங்குகிறது! | ஒரே நாளில் வெளியாகும் இரண்டு நீளமான படங்கள்! |

பாலிவுட்டின் முன்னணி நடிகர் ஷாரூக்கான். இவரது நடிப்பில் வெளியான பதான், ஜவான் படங்கள் தொடர்ச்சியாக ரூ.1000 கோடி வசூலை கடந்து சாதித்தன. ஆரம்பகாலத்தில் நிறைய தோல்விகளை சந்தித்துள்ளார் ஷாரூக். இந்நிலையில் துபாய் நடந்த நிகழ்ச்சியில் தனது தோல்விகள் பற்றி அவர் பேசியதாவது : ‛‛தோல்விகளுக்காக ஒரு நாளும் அழக்கூடாது. அதை சுயபரிசோதனை செய்ய வேண்டும். எனக்கு ஏற்பட்ட தோல்விகளை நினைக்கையில் வெறுப்பாக உள்ளது. நான் பாத்ரூமில் அழுதிருக்கிறேன். அதை யாரிடமும் வெளிகாட்டியதில்லை.
இந்த உலகம் உங்களுக்கு எதிராக இல்லை என நம்ப வேண்டும். விரக்தி இருந்தாலும் அதிலிருந்து மீண்டு வர கற்றுக் கொள்ள வேண்டும். உங்களுக்கு மட்டுமே தவறு நடக்கிறது என நம்பக்கூடாது. வாழ்க்கை ஓடிக் கொண்டே இருக்கும். அது என்ன செய்ய வேண்டுமோ அதை செய்யும். அதற்காக வாழ்க்கையை குறை கூற கூடாது'' என்றார்.