பிரபாஸின் புஜ்ஜியை வடிவமைத்ததில் ஆனந்த் மஹிந்த்ரா பெருமிதம் | கிறிஸ்துமஸ் பண்டிகையில் ராம் ரிலீஸ் ; தயாரிப்பாளர் உறுதி | படப்பிடிப்பில் பிரித்விராஜிடம் இருமுகம் காட்டும் மோகன்லால் | விவாகரத்து செய்தி - நமீதா கொடுத்த விளக்கம்! | ஓடிடியால் தியேட்டருக்கு செல்லும் மனநிலை குறைந்து வருகிறது! -ஹிப் ஹாப் ஆதி பேச்சு | மே 28ம் தேதி அனைத்து சட்டசபை தொகுதிகளிலும் அன்னதானம்! விஜய் வெளியிட்ட அறிக்கை | 3வது திருமணம் செய்து கொண்ட நடிகை மீரா வாசுதேவன்! | மோகனின் ஹரா படத்தின் டிரைலர் வெளியானது! | 2024ன் மற்றுமொரு 25 நாள் படம் 'அரண்மனை 4' | தமிழில் பிஸியாக இருக்கும் கிரித்தி ஷெட்டி |
பிரபல பாலிவுட் நடிகை கரீனா கபூர். 60க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள கரீனா பாலிவுட்டில் அதிக சம்பளம் பெறும் நடிகையாக இருக்கிறார். தற்போது அவர் ஐ.நா சர்வதேச குழந்தைகள் நிதியத்தின் (யுனிசெப்) இந்திய தூதரா நியமிக்கப்பட்டுள்ளார். உலகம் முழுவதும் உள்ள குழந்தைகளின் பாதுகாப்பு, கல்வி, சுகாதாரம் மற்றும் உரிமைகளுக்காக ஐ.நா. சர்வதேச குழந்தைகள் நிதியம் செயல்பட்டு வருகிறது.
இதுகுறித்து கரீனா கபூர் கூறும்போது, “இந்த பொறுப்பை மிகுந்த கவுரவம் மற்றும் மிகுந்த பணிவுடன் ஏற்றுக்கொள்கிறேன். கடந்த 10 ஆண்டுகளாக மிகவும் பொறுமையுடன், மனநிறைவாக வேலை செய்திருக்கிறேன். இதையடுத்து ஐ.நா சர்வதேச குழந்தைகள் நிதியத்தின் தேசிய தூதராக நியமிக்கப்பட்டுள்ளேன். இதனால் எனது பொறுப்பு மேலும் அதிகரித்துள்ளது.
இந்த பொறுப்பை முழுமனதுடன் ஏற்றுக்கொண்டு, இந்தியாவின் எந்த பகுதியில் எந்த குழந்தை பாதிக்கப்பட்டாலும், அது ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும், பேசக்கூடிய குழந்தையாக இருந்தாலும், அல்லது மாற்றுத்திறனாளியாக இருந்தாலும், அனைத்து குழந்தைக்கும் அவர்களது அடிப்படை உரிமை கிடைப்பதற்காக பாடுபடுவேன்” என்கிறார் கரீனா கபூர்.