‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
பிரபல பாலிவுட் நடிகர் சல்மான்கான் வீட்டின் அருகே துப்பாக்கிச்சூடு நடந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. மும்பை அருகே பாந்த்ராவில் உள்ள இவரது வீட்டின் அருகே 2 மர்ம நபர்கள் இன்று அதிகாலை 5 மணியளவில் துப்பாக்கியால் 3 ரவுண்ட் சுட்டு தப்பியோடினர். இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
துப்பாக்கிச்சூடு நடைபெறும் போது சல்மான் கான் வீட்டில் இருந்ததாக கூறப்படுகிறது. சல்மான் கானுக்கு ‛ஒய் பிளஸ்' பாதுகாப்பு போடப்பட்டும் துப்பாக்கிச்சூடு நடந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தப்பியோடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர். தொடர்ந்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.