கல்வான் பள்ளத்தாக்கு மோதல் கதையில் உருவாகும் படத்தில் சல்மான் கான்! | தக்லைப் படத்தை அடுத்து தெலுங்கு நடிகரை இயக்கும் மணிரத்னம்! | வாடிவாசல் படத்திற்காக 100 சதவீத அர்ப்பணிப்பை கொடுப்பேன்: வெற்றிமாறன் வெளியிட்ட தகவல் | சென்னை விமான நிலையத்தில் சந்தித்துக் கொண்ட விஷால் - விஜய் சேதுபதி! | ராமாயணா படத்தில் யஷ்-க்கு ஜோடியாகும் காஜல் அகர்வால்! | பாகுபலி கதாசிரியரின் அறிவுறுத்தலின்படி கண்ணப்பாவில் மீண்டும் சேர்க்கப்பட்ட மோகன்லால் கதாபாத்திரம் | வாய் பேசா கதாபாத்திரத்தில் சிறை கைதியாக நடித்துள்ள ரவீணா ரவி | அம்மாவின் 2வது திருமணம் ஏற்படுத்திய பாதிப்பு: மனம்திறந்த லிஜோ மோல் ஜோஸ் | பஸ் டிரைவர்களின் பல்லை உடைப்பேன் ; சுரேஷ்கோபி மகன் ஆவேசம் | ஜெயிலர்-2 படப்பிடிப்பில் ரஜினியை சந்தித்து வாழ்த்து பெற்ற மலையாள நடிகர் |
பிரபல பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் தமிழ் ரசிகர்களுக்கும் ரொம்பவே பரிச்சயமானவர். குறிப்பாக சுனாமி தாக்கிய சமயத்தில் கடலூர் மாவட்டத்தில் தேவனாம்பட்டினம் என்கிற ஒரு கிராமத்தையே தத்தெடுத்து உதவி செய்த வகையில் அனைவரின் பாராட்டையும் பெற்றவர். சமீப காலமாக விவேகம், லூசிபர், கடவா என தொடர்ந்து தென்னிந்திய படங்களிலும் வில்லனாக நடித்து வருகிறார். இந்த நிலையில் படத்தயாரிப்பு நிறுவனம் ஒன்றுக்கு கிட்டத்தட்ட ஒன்றரை கோடி ரூபாய் பணம் கொடுத்து இவர் ஏமாந்துள்ள நிகழ்வு தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
விவேக் ஓபராயுடன் நெருங்கி பழகிய தயாரிப்பாளர் மற்றும் திரைப்படத் துறையை சேர்ந்த இருவர் என மொத்தம் மூவர் தாங்கள் புதிய படம் தயாரிப்பதாகவும் அதில் விவேக் ஓபராய் தயாரிப்பாளராக இணைந்து கொள்ள வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார்களாம். விவேக் ஓபராயும் கிட்டத்தட்ட தன்னிடம் இருந்து ரூ.1.5 கோடியை தயாரிப்புக்கு என கொடுத்துள்ளார். ஆனால் அவர்கள் அந்த பணத்தை பட தயாரிப்புக்கு பயன்படுத்தாமல் தங்களது சொந்த விஷயங்களுக்காக பயன்படுத்தி வந்தார்கள் என்பது பின்னர் தான் தெரியவந்ததாம்.
அதைத் தொடர்ந்து விவேக் ஓபராயின் ஆடிட்டர் இதுகுறித்து மும்பையில் அந்தேரியில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதன் மூலம் தான் இந்த விஷயம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. போலீசார் மோசடி செய்த நபர்களை தற்போது தேடி வருகின்றனர்.