புஷ்கர் - காயத்ரி அடுத்த படத்தில் சிவகார்த்திகேயன்? | செல்வராகவன் நடிக்கும் புதிய பட அறிவிப்பு! | பைசன் படம் குறித்து இயக்குனர் ராம் வெளியிட்ட தகவல் | ஒர்க் அவுட்டின்போது டிரெண்டிங் பாடலுக்கு நடனமாடிய மிருணாள் தாக்கூர் | ஓடிடியில் வெளியான கமலின் தக் லைப் | சிம்பு படத்தில் சிவராஜ்குமார் இணைகிறாரா? | ஹாரிஸ் ஜெயராஜை கவுரவப்படுத்திய கனடா அரசாங்கம் | அஜித்திடம் ஏமாற்றத்தை வெளிப்படுத்திய விஷ்ணு மஞ்சு | எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‛ராமாயணா' : அறிமுக வீடியோ வெளியீடு | மார்கோ 2 நிச்சயம் உருவாகும் : உன்னி முகுந்தன் விலகிய பிறகும் உறுதியாக நிற்கும் தயாரிப்பாளர் |
பிரபாஸ், கீர்த்தி சனோன், சைப் அலிகான் நடித்து ராமாயணத்தைத் தழுவி எடுத்த 'ஆதி புருஷ்' படம் கடும் எதிர்ப்புகளையும், விமர்சனங்களையும் பெற்றது. நாம் இதற்கு முன் திரைப்படங்களிலும், டிவி சீரியல்களிலும் பார்த்த ராமாயணத்திற்கும் 'ஆதி புருஷ்' படத்திற்கும் நிறைய வித்தியாசம் இருந்தது. அந்தக் காவியத்தின் உண்மைத் தன்மையை படக்குழுவினர் கெடுத்துவிட்டதாக பலரும் குற்றம் சாட்டினர்.
இந்நிலையில் ஹிந்தியில் பிரபல இயக்குனரான நிதிஷ் திவாரி இயக்கத்தில் ரன்பீர் கபூர், ஆலியா பட், யஷ் மற்றும் பலர் நடிக்க ராமாயணக் காவியத்தை அப்படியே படமாக்க திட்டமிட்டுள்ளனர். அந்தக் காவியத்தின் தன்மை சிறிதும் குலையாமல் அந்தப் பழமையுடனும், கலாச்சாரத்துடனும் படமாக்கவே திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதனால் அனைத்தையும் முன்கூட்டியே சரியாகத் திட்டமிட்டு படமாக்க வேண்டும் என்ற முயற்சியில் இறங்கியுள்ளார்களாம்.
விரைவில் படக்குழுவினர் டெஸ்ட் ஷுட் ஒன்றையும் நடத்தப் போகிறார்களாம். அதில் ரன்பீர் கபூர், ஆலியா பட், யஷ் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. டெஸ்ட் ஷுட்டிற்காகவே மும்பையில் தனியாக ஒரு அரங்கம் அமைக்கும் வேலைகள் நடந்து வருவதாகச் சொல்கிறார்கள். டெஸ்ட் ஷுட் முடிந்து அது திருப்தியான பிறகே அடுத்த கட்ட அப்டேட்டை படக்குழு வெளியிடும் என்கிறார்கள். பாலிவுட்டின் மிகப் பிரம்மாண்டமான படைப்பாக இந்த 'ராமாயணம்' உருவாக உள்ளது.