300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் | பிளாஷ்பேக்: சினிமாவுக்கு பாட்டு எழுதிய காளிமுத்து | பிளாஷ்பேக்: நாகேஸ்வர ராவின் தம்பியாக நடித்த நம்பியார் | 3 மணி நேரம் 40 நிமிடம் ஓடப் போகும் 'பாகுபலி தி எபிக்' | 3 ஹீரோக்கள் இணையும் படம் | பிளாஷ்பேக்: மூன்று திரைப்படங்களில் மட்டுமே நடித்து, முதன்மை குழந்தை நட்சத்திரம் என்ற உச்சம் தொட்ட “பேபி சரோஜா” | பிரதீப்பின் ‛எல்ஐகே' தள்ளிவைப்பு : 'டியூட்' தயாரிப்பாளர் மீது 'எல்ஐகே' தயாரிப்பாளர் குற்றச்சாட்டு |
பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் பயோபிக் படங்களில் ஆர்வத்தோடு நடிப்பவர். தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடிய ஜான்சி ராணி கேரக்டர்களில் நடித்துள்ளார். அடுத்து அவர் முன்னாள் பிரதமர் இந்திராவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்க முடிவு செய்தார். இதனை அவரே தயாரிக்கிறார், இதற்காக கடந்த 2 ஆண்டுகளாக அவரது கதை இலாகா பணியாற்றி வருகிறது.
கங்கனா நடிப்பில் சமீபத்தில் வெளியான ஹாலிவுட் பாணியிலான ஆக்ஷன் படம் தக்காட் பெரிய தோல்வியை சந்தித்தது. சுமார் 90 கோடியில் தயாரான படம் 3 கோடிதான் வசூலித்தது. இதற்கெல்லாம் கலங்காத கங்கனா அடுத்த அதிரடியில் இறங்கி உள்ளார். தனது கதை இலாகா எழுதி முடித்துள்ள இந்திராவின் வாழ்க்கை வரலாற்று கதையை எமெர்ஜென்சி என்ற பெயரில் படமாக்குகிறார். இந்த படத்தை வேறொருவர் இயக்குவதாக இருந்தது. தற்போது இதனை கங்கனாவே இயக்கி நடிக்க முடிவு செய்துள்ளார்.
இந்த படத்தில் இந்திராவால் கொண்டுவரப்பட்ட எமெர்ஜென்சி காலத்தில் மக்கள் பட்ட துயரங்களும், அப்போதைய இந்திராவின் நடவடிக்கைகளும் முக்கியமாக இருக்குமாம். பாரதிய ஜனதா காட்சியின் சார்பாளர் என்று கருதப்படும் கங்கனா இயக்கும் இந்திரா படத்திற்கு இப்போதே எதிர்பார்ப்பு கிளம்பி உள்ளது. இந்த படத்தை தனது தயாரிப்பில் இருந்து விடுவித்து, தக்காட் படத்தை தயாரித்த நிறுவனத்திற்கு கொடுக்க இருக்கிறாராம்.