கேரள திரைப்பட அகாடமி தலைவர் பதவியை ராஜினாமா செய்த ரசூல் பூக்குட்டி. | சில சினிமா பிரபலங்களை தனிப்பட்ட முறையில் சந்திக்கும் முதல்வர் விஜய் | அஜித் இவ்வளவு சிறப்பாக கிரிக்கெட் ஆடுவாரா ? | அரைமணிநேரத்தில் முடிவான படம்... ஆர்ஜே பாலாஜியின் விஷன் தான் கருப்பு : சூர்யா பேச்சு | விளையாட்டு தொடர்பான படத்தில் பவிஷ் | மீண்டும் நடிப்பிற்கு திரும்பும் நிவேதா பெத்துராஜ் | அதிகபட்ச கட்டணம் 450, கேளிக்கை வரி நீக்கம் : முதல்வருக்கு 10 அம்ச கோரிக்கையை வைத்த திரையரங்கு உரிமையாளர் சங்க நிர்வாகிகள் | கோல்கட்டாவில் மெட்ரோ ரயிலில் பயணித்த விஷால் | திரிஷ்யம் 3 : முதல் நாள் வசூல் 50 கோடி | திருச்சி கிழக்கு வேட்பாளரா? ராஜ்யசபா எம்.பி.,யா?: நடிகர் சஞ்சீவ் பதில் |

ஹிந்தி சினிமாவின் பிரபல நடிகைகளில் ஒருவரான பிரீத்தி ஜிந்தாவுக்கு சமீபத்தில் வாடகை தாய் மூலம் அமெரிக்காவில் இரட்டை குழந்தை பிறந்துள்ளது. அதையடுத்து இந்த குழந்தைகளை விமானத்தில் அவர் இந்தியாவுக்கு அழைத்து வந்துள்ளார், நீண்ட தூர விமான பயணம் என்பதால் இரட்டை குழந்தைகளை கவனித்துக் கொள்வதற்கு சிரமப்பட்டுள்ளார். அப்போது அதே விமானத்தில் வந்த பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷன் ஒரு குழந்தையை தான் வாங்கி வைத்துக் கொண்டு அவருக்கு உதவி செய்திருக்கிறார்.
இதுகுறித்து ப்ரீத்தி ஜிந்தா கூறுகையில் , நமது வாழ்க்கையில் பலர் வருவார் போவார்கள். ஆனபோதிலும் உண்மையாகவே உதவி செய்வது ஒரு சிலர் மட்டுமே. அந்த வகையில் என்னுடைய குழந்தைகளை நீண்ட நேர விமானப் பயணத்தில் ஹிருத்திக் ரோஷன் அன்போடு கவனித்துக் கொண்டார். அவருக்கு எனது நன்றி என்று சொல்லி அவருடன் எடுத்த ஒரு புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார்.