நயன்தாராவுடன் இணையும் படத்திற்காக போட்டோஷூட் நடத்திய சிரஞ்சீவி! | தனுஷின் 'குபேரா' படத்தை 50 கோடிக்கு கைப்பற்றிய அமேசான் பிரைம்! | நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகும் சூர்யாவின் 'ரெட்ரோ' | 'கொம்பு சீவி' படத்திற்காக மதுரை வட்டார தமிழில் டப்பிங் பேசும் சண்முக பாண்டியன்! | விஜய்சேதுபதி நடித்துள்ள 'ஏஸ்' படத்தின் சென்சார் - ரன்னிங் டைம் வெளியானது! | ரவி மோகனிடம் மாதம் ரூ.40 லட்சம் ஜீவனாம்சம் கேட்கும் ஆர்த்தி ரவி | ரோல் மாடலுக்கு முத்தமிட்டு, மண்டியிட்டு மரியாதை செலுத்திய அஜித் | 'விக்ரம் 63' படத்தின் கதாநாயகி யார்? | வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க சூரி என்ன சொன்னார் தெரியுமா? | இசையமைப்பாளர் சாம் சிஎஸ் மீது மோசடி புகார் |
இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ். கடந்த 2013ம் ஆண்டு, தன் பள்ளி தோழியும், பிரபல பின்னணி பாடகியுமான சைந்தவியை காதலித்து மணந்தார். திருமணத்துக்கு முன்னும், பின்னரும், இருவரும் இணைந்து நிறைய பாடல்களை பாடியுள்ளனர்.
கடந்த, 12 ஆண்டுகளாக ஒன்றாக வாழ்ந்து வந்த இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. குடும்பத்தினர் இடையே எழுந்த பிரச்னையால், சமீப நாட்களாக இருவரும் தனித்தனியாக வாழ்ந்து வருவதாகக் கூறப்பட்டது. கடந்தாண்டு சமூக வலைதளத்தில், ஜி.வி.பிரகாஷ், சைந்தவி ஆகியோர், தாங்கள் பரஸ்பரம் பிரிவதாக பதிவிட்டனர்.
இந்நிலையில், ஜி.வி.பிரகாஷ், சைந்தவி ஆகியோர், சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் பரஸ்பரம் விவாகரத்து கோரி, மனு தாக்கல் செய்தனர். சமீபத்தில் இந்த மனு, சென்னை முதலாவது கூடுதல் குடும்ப நல நீதிமன்ற நீதிபதி எஸ்.செல்வசுந்தரி முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது, ஜி.வி.பிரகாஷ் மற்றும் சைந்தவி நேரில் ஆஜராகினர். தாங்கள் இருவரும் மனமுவந்து பிரிவதாக, நீதிபதியிடம் தெரிவித்தனர்.அதை ஏற்ற நீதிபதி, வழக்கு விசாரணையை தள்ளிவைத்தார்.
இந்த வழக்கு இன்று (ஏப்ரல்04) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, இசையப்பாளர் ஜி.வி.பிரகாஷ் - பாடகி சைந்தவி இருவரும் செப்.25ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என சென்னை குடும்ப நல நீதிமன்றம் உத்தரவிட்டது.