காமெடி முதல் கிரைம் த்ரில்லர் வரை : இந்த வார ஓடிடி ரிலீஸ்......! | வாரணாசி-க்கு பின்னணி இசை அமைப்பது எப்போது... : கீரவாணி கொடுத்த அப்டேட் | 'சர்வம் மாயா' நாயகிக்கு பாராட்டுடன் பரிசும் அனுப்பிய சூர்யா ஜோதிகா | நன்றி சொன்னார் எஸ்.பி.முத்துராமன் : கண்கலங்கினார் வி.சி.குகநாதன் | ஹனிரோஸுக்கு ஜிஎஸ்டி துறை அனுப்பிய நோட்டீசை தள்ளுபடி செய்த கேரள உயர்நீதிமன்றம் | நடிகர் ஜெயசூர்யாவின் 39 லட்சம் மதிப்புள்ள சொத்துக்களை முடக்கிய அமலாக்கத்துறை | கேரளா பிளஸ் 2 மாதிரி தேர்வில் மோகன்லாலின் சினிமா பயணம் குறித்து கேள்வி | அஞ்சு ரூபாய் டாக்டர் போன்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் மம்முட்டி | 'வேள்பாரி' வேலைகளில் தீவிரம் காட்டும் ஷங்கர் | பெரும் வரவேற்பைப் பெற்ற 'நாகபந்தம்' டீசர் |

சமீபத்தில் ராஜமவுலி இயக்கத்தில் வெளியான ஆர்ஆர்ஆர் படத்தில் ஜூனியர் என்டிஆர் வசிக்கும் பகுதியை சேர்ந்த மக்களின் தலைவர் கதாபாத்திரத்தில் வயதான தோற்றத்தில் நடித்து இருந்தவர் பாலிவுட் நடிகர் மகரந்த தேஷ்பாண்டே. சில வருடங்களுக்கு முன்பு மோகன்லால் நடித்த புலி முருகன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த இவர் தற்போது மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படத்திலும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
இந்தநிலையில் ஆர்ஆர்ஆர் படம் வெளியான பிறகு படத்தில் அவர் ஒன்றிரண்டு காட்சிகளில் சில நொடிகள் மட்டுமே வந்து சென்றது குறித்து மீடியாவில் அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, தான் மேலும் இரண்டு காட்சிகளில் நடித்திருப்பதாகவும் ஆனால் படத்தின் நீளம் கருதி அவை வெட்டப்பட்டு விட்டதாகவும் கூறிய அவர் ராஜமவுலியின் இயக்கத்தில் ஒரே ஒரு ஷாட்டில் மட்டும் வந்து சென்றால் கூட தனக்கு பெருமை தான் என்றும் கூறியுள்ளார்.
இந்த படத்தில் இவரை நடிக்க வைப்பதற்காக இயக்குனர் ராஜமவுலி இவரை மும்பையிலிருந்து ஹைதராபாத்தில் உள்ள தனது அலுவலகத்திற்கு வரவழைத்தார். அந்த சமயம் முடியை நன்றாக ஒட்ட வெட்டி இருந்த மகரந்த தேஷ்பாண்டேவை பார்த்த ராஜமௌலி அதிர்ச்சியானாராம். ஆனால் மகரந்த தேஷ்பாண்டேவோ, தான் செல்லும் போது கூடவே கையுடன் ஒரு விக்கையும் எடுத்துச் சென்றிருந்தார். ராஜமவுலியின் அலுவலகத்தில் இருந்த ஒப்பனை கலைஞரின் உதவியுடன் அந்த வைகை அணிந்து காட்ட அதன்பிறகு தான் ராஜமவுலிக்கு திருப்தி ஏற்பட்டது என்று கூறியுள்ளார் மகரந்த தேஷ்பாண்டே.




