தென்னிந்திய சினிமாவில் நிகழ்ந்த அசவுகரியம் : டாப்சி | பவுன்தாயின் சேட்டைகளுடன் பட்டையை கிளப்பும் 'தாய் கிழவி' டிரைலர் | நெகட்டிவா பேசுறவங்களை சுத்தமாக பிடிக்காது என்கிறார் சமந்தா | பிளாஷ்பேக்: பல்வேறு சிறப்பிற்கும், புதுமைக்கும் புகலிடமாய் அமைந்த பைந்தமிழ் திரைக்காவியம் “பாவமன்னிப்பு” | மூன்றாவது முறையாக கிருஷ்ணாவுக்கு ஜோடியான பிந்து மாதவி | மணிரத்னம் படத்தில் இணையும் விஜய் சேதுபதி, சாய் பல்லவி | கோவில் திருவிழாவில் பங்கேற்றதால் சலசலப்பு ; அழகான விளக்கம் கொடுத்த அன்னா பென் | இப்போது வரை என் படங்களை என் குழந்தைகள் பார்க்கவில்லை ; ஷாலினி அஜித் | வெங்கடேஷ் படத்திற்காக தெலுங்கில் நுழைந்த யோகி பாபு | சிரஞ்சீவி, பாலகிருஷ்ணா இணைந்து நடிப்பார்களா ? ரசிகர்கள் எதிர்பார்ப்பு |

கடந்த ஆண்டு முழுவதும் பரபரப்பாக இருந்த நடிகை கங்கனா ரணவத், தமிழில் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடித்தார். மணிகர்னிகாக படத்திற்காக தேசிய விருது பெற்றார். இந்திராகாந்தியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிப்பதாக அறிவித்தார். காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்களை கடுமையாக விமர்சித்தார். விவசாயிகளை பயங்கரவாதிகள் என்றார். இதனால் பல புகார்கள், விசாரணைகளை சந்தித்தார்.
இந்த ஆண்டு அமைதியாக இருக்க வேண்டும் என்பதற்காக திருப்பதி சென்று சாமி தரிசனம் செய்தார். பின்னர் அங்கிருந்து காளகஸ்தி வந்து சாமி தரிசனம் செய்து கோ பூஜையும் செய்தார். பின்னர் ராகு கேது பூஜை செய்தார். காளகஸ்தி தோஷம் நீக்கம் புண்ணிய ஸ்தலம் என்பதால் இந்த பூஜைகளை செய்தார்.
பின்னர், அவருக்கு வேதசீர்வசனம் வழங்கப்பட்டது. காளகஸ்தி எம்எல்ஏ அவருக்கு நினைவு பரிசு மற்றும் பிரசாதங்களை வழங்கினார். கோவிலுக்கு ஐஎஸ்ஓ சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்ச்சியிலும் அவர் பங்கேற்றார்.