ஸ்பெயின் கார் பந்தயத்தில் மூன்றாமிடம்: அஜித் அணிக்கு உதயநிதி பாராட்டு | ‛மா இண்டி பங்காரம்' படப்பிடிப்பு இம்மாதம் துவக்கம்: சமந்தா வெளியிட்ட தகவல் | துணிக்கடை திறப்பு விழாவில் கூட்ட நெரிசலில் சிக்கிக்கொண்ட பிரியங்கா மோகன்! | 5 வருடத்திற்கு பிறகு பாஸ்போர்ட்டை திரும்பப்பெற்ற ரியா சக்கரவர்த்தி | ‛காந்தாரா சாப்டர் 1' வெற்றியை ஜெயசூர்யா வீட்டில் கொண்டாடிய ரிஷப் ஷெட்டி | 10க்கு 9 எப்பவுமே லேட் தான் ; இண்டிகோ விமான சேவை மீது மாளவிகா மோகனன் அதிருப்தி | பிரம்மாண்ட விழா நடத்தி மோகன்லாலை கவுரவித்த கேரள அரசு | வதந்திகளில் கவனம் செலுத்தவில்லை: காஜல் அகர்வால் | தள்ளி வைக்கப்படுமா 'லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி' ? | சூரியின் 'மண்டாடி' படப்பிடிப்பில் விபத்து: கேமரா கடலில் மூழ்கியது |
கடந்த ஆண்டு முழுவதும் பரபரப்பாக இருந்த நடிகை கங்கனா ரணவத், தமிழில் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடித்தார். மணிகர்னிகாக படத்திற்காக தேசிய விருது பெற்றார். இந்திராகாந்தியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிப்பதாக அறிவித்தார். காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்களை கடுமையாக விமர்சித்தார். விவசாயிகளை பயங்கரவாதிகள் என்றார். இதனால் பல புகார்கள், விசாரணைகளை சந்தித்தார்.
இந்த ஆண்டு அமைதியாக இருக்க வேண்டும் என்பதற்காக திருப்பதி சென்று சாமி தரிசனம் செய்தார். பின்னர் அங்கிருந்து காளகஸ்தி வந்து சாமி தரிசனம் செய்து கோ பூஜையும் செய்தார். பின்னர் ராகு கேது பூஜை செய்தார். காளகஸ்தி தோஷம் நீக்கம் புண்ணிய ஸ்தலம் என்பதால் இந்த பூஜைகளை செய்தார்.
பின்னர், அவருக்கு வேதசீர்வசனம் வழங்கப்பட்டது. காளகஸ்தி எம்எல்ஏ அவருக்கு நினைவு பரிசு மற்றும் பிரசாதங்களை வழங்கினார். கோவிலுக்கு ஐஎஸ்ஓ சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்ச்சியிலும் அவர் பங்கேற்றார்.