எனக்கும் ஒரு எதிர்காலம் உள்ளது... வதந்தி பரப்பாதீங்க : பவித்ரா லட்சுமி | பிரியங்கா மோகனின் துருக்கி கனவு நனவானது | லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி - அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | கார் பந்தய பயிற்சியின்போது மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித் | ரீ-ரிலீஸில் சச்சின் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு | விவாகரத்து நெருங்கிவிட்டது என பதிவு போட்ட ரசிகருக்கு சோனாக்ஷி கொடுத்த பதிலடி | ரயில் ஜன்னல் கம்பி வழியாக மாளவிகா மோகனனிடம் முத்தம் கேட்ட மர்ம நபர் | ரெட்ரோ படத்தின் டிரைலரை உருவாக்கிய அல்போன்ஸ் புத்ரன் | கேரள அரசு விருதை கட்டி அணைத்தபடி தூங்கிய பிரேமலு நடிகர் : வைரலாகும் புகைப்படம் | போதை பொருள் வழக்கு : நடிகர் சைன் டாம் சாக்கோ கைது |
'பிக்பாஸ் சீசன் 5' நிகழ்ச்சியில், திருநங்கை நமிதா மாரிமுத்து செய்த களேபரத்தால், அவர் வெளியேற்றப்பட்டதாக, தகவல்கள் வெளியாகியுள்ளன.
விஜய், 'டிவி'யில் ஒளிபரப்பாகி வரும், 'பிக்பாஸ் சீசன் 5' நிகழ்ச்சியை, நடிகர் கமல் தொகுத்து வழங்குகிறார். இந்த முறை பெண்கள் அதிகளவில் பங்கேற்க, திருநங்கை நமிதா மாரிமுத்துவும் பங்கேற்றார். கடந்த சில தினங்களுக்கு முன், தன் திருநங்கை வாழ்க்கை குறித்து நமிதா பேசியது, அனைவரது பாராட்டையும், அனுதாபத்தையும் பெற்றது. இதன் தாக்கம் குறைவதற்குள், சக போட்டியாளர் தாமரைச் செல்விக்கும் நமிதாவுக்கும் இடையே ஏற்பட்ட பிரச்னை பெரிதானது.
வீட்டில் இருந்த பொருட்களை துாக்கியெறிந்து, நமிதா ரகளை செய்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நமீதாவை, பிக்பாஸ் அணி சமாதானப்படுத்த முயற்சித்தது. அது, பலனளிக்காத நிலையில், 'ரெட் கார்டு' தரப்பட்டு, நமிதா வெளியேற்றப்பட்டதாக தெரிகிறது. அதே நேரத்தில், தவிர்க்க முடியாத காரணத்தால் நமிதா, அவராகவே வெளியேறியதாகவும் ஒரு தரப்பில் கூறப்படுகிறது.