‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
சின்னத்திரை நடிகர்களான அபிநவ்யா - தீபக்குமார் தங்களது காதல் குறித்து சமீபத்தில் அறிவித்திருந்த நிலையில் அவர்களுக்கு தற்போது நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது.
செய்திவாசிப்பாளராக பணியாற்றிய அபிநவ்யா சீரியல்களின் மூலம் சின்னத்திரைக்கு நடிக்க வந்தார். தற்போது அவர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சித்திரம் பேசுதடி சீரியலில் நடித்து வருகிறார். அபிநவ்யா அதே சேனலில் ஒளிபரப்பாகும் என்றென்றும் புன்னகை தொடரில் கதநாயகனாக நடித்து வரும் தீபக்குமார் என்பவரை காதலித்து வந்தார். இவர்கள் இருவரும் தாங்கள் காதலித்து வருவதை அண்மையில் இன்ஸ்டாகிராம் மூலம் ரசிகர்களுக்கு தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் அவர்களது நிச்சயதார்த்தம் சில தினங்களுக்கு முன் கோலாகலமாக நடைபெற்று முடிந்துள்ளது. அதன் வீடியோவை தற்போது இருவரும் தங்களது இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளனர். இதனையடுத்து அபிநவ்யா - தீபக்குமாருக்கு சகநடிகர்களும், ரசிகர்களும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.