விஜயுடன் இணைய தயார்: ‛புலி' பட தயாரிப்பாளர் அறிவிப்பு | உண்மை சம்பவம் பின்னணியில் உருவான ‛ரோஜா மல்லி கனகாம்பரம்' | ‛போலீஸ் ஸ்டேஷன் மெயின் பூத்': ரம்யா கிருஷ்ணனின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது! | ராஷ்மிகாவின் ‛மைசா' படப்பிடிப்பு கேரளா அதிரப்பள்ளி காட்டுப் பகுதியில் தொடங்கியது! | அஜித் 64வது படம் : பிளானை மாற்றிய ஆதிக் ரவிச்சந்திரன்! | தன்னுடைய பெயரில் ரசிகர் நடத்தும் ஹோட்டலுக்கு அனுமதி அளித்த சிரஞ்சீவி | பஸ் விபத்து எதிரொலி ; மீனாட்சி சவுத்ரி போஸ்டர் வெளியீட்டை தள்ளிவைத்த நாக சைதன்யா படக்குழு | சீனியர் நடிகர் மதுவை நேரில் சென்று சந்தித்த மம்முட்டி | காந்தாராவை பணத்திற்காக எடுக்கவில்லை: ரிஷப் ஷெட்டி | 2030லாவது மகாபாரதத்தை ஆரம்பிப்பீர்களா ? ராஜமவுலிக்கு மகேஷ்பாபு கேள்வி |

சித்து பிளஸ் 2, வில் அம்பு உள்ளிட்ட படங்களில் நடித்தவர் சாந்தினி தமிழரசன். நடன இயக்குனர் நந்தாவை திருமணம் செய்த இவர் இப்போது சின்னத்திரையில் பிஸியாக உள்ளார். அதேப்போன்று நந்தாவும், நடனம், சின்னத்திரையில் பிஸியாக உள்ளார். இந்த தம்பதியினர் தங்களது புது வீட்டின் புதுமனை புகுவிழாவை சமீபத்தில் விமர்சையாக கொண்டாடியுள்ளனர். இந்த சந்தோஷமான நிகழ்வில் குடும்ப உறுப்பினர்களுடன், சக நடிகர்களும் கலந்து சிறப்பித்துள்ளனர். அப்போது அங்கு எடுக்கப்பட்ட புகைப்படத்தை சக நடிகரான அம்ருத் தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். அதில் அவர், “கடின உழைப்புக்கு கிடைத்த பலன்... புதிய வீட்டிற்கு வாழ்த்துகள்...உங்களை நினைத்து மகிழ்ச்சியடைகிறேன்” என தனது வாழ்த்துகளை அவர்களுக்கு தெரிவித்துள்ளார். இதனையடுத்து சாந்தினி - நந்தா ஜோடிக்கு பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.