‛கில்லர்' முதல்கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு ‛ஜெயிலர்-2'வில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | காரில் கோளாறு: ஷாரூக்கான், தீபிகா படுகோனே மீது வழக்கு | ‛வார் - 2' படம் தோல்வி அடைந்ததால் ஜூனியர் என்டிஆரின் அடுத்த படத்தை கைவிட்ட நிறுவனம்! | எனது சொகுசு பங்களா வீடியோவை உடனே நீக்குங்கள்! - ஆலியா பட் வைத்த ஆவேச கோரிக்கை | 23 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் ‛ரன்' | சிவகார்த்திகேயனுக்கு போட்டியா : ‛கேபிஒய்' பாலா பதில் | பிளாஷ்பேக்: திகைக்க வைக்கும் 'த்ரில்லர்' திரைப்படத்தின் நாயகனாக எம் என் நம்பியார் நடித்த “திகம்பர சாமியார்” | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் ‛பர்ஸ்ட் பன்ச்' எப்படி இருக்கு? | மகுடம் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது! | ஷாலின் சோயாவின் இயக்குனர் ஆசை! |
சின்னத்திரை நடிகையான ரேஷ்மா தனது அழகின் ரகசியம் பற்றி கூறியுள்ளார். ஜீ தமிழில் ஒளிபரப்பான பூவே பூச்சூடவா சீரியலில், ரேஷ்மா கதாநாயகியாக அறிமுகமானார். தற்போது கலர்ஸ் தமிழில் அபி டெய்லர் தொடரில் நடித்து வருகிறார். தனது குறும்பான நடிப்பினால் ரசிகர்களை கவர்ந்த ரேஷ்மா, தற்போது தனது அழகுக்கான காரணம் குறித்த ரகசியத்தை வெளியிட்டுள்ளார்.
அதில், சிறு வயதிலிருந்தே தேங்காய் எண்ணெய் தேய்த்து குளிப்பது தான் எனது வழக்கம் . அதை தவிர பெரிதாக எதையும் செய்ததில்லை. ஆனால், இப்போது ஷூட்டிங் காரணமாக ஏரளமான சரும பிரச்னைகள் வருகின்றன. சருமத்தை பாதுகாக்கும் ரகசியத்தை இப்போது தான் கண்டுபிடித்தேன். சருமத்திற்கு முல்தானி மட்டி, தலைமுடிக்கு ஆட்டுப்பால் கலந்த தேங்காய் எண்ணெய். இதை நக்ஷ்த்திரா நாகேஷின் அம்மா எனக்கு தந்தார். டயட்டுக்கு இண்டர்மிட்டன்ட் மற்றும் கீட்டோ டயட்டுகள் ஒர்க் அவுட் ஆகிறது என்கிறார்.