70வது பிலிம்பேர் விருதுகள் - அதிக விருதுகளை வென்ற 'அமரன்' | இது கமல் ரஜினி பட கணக்கு | சிறிய பட்ஜெட் படத்தை இயக்கும் சமுத்திரக்கனி! | ‛கல்கி 2898 ஏ.டி' படத்தின் படப்பிடிப்பு துவங்கியது! | பிரதீப் ரங்கநாதன் இயக்குனருடன் கைகோர்க்கும் சிம்பு! | அட..டா... மதுரை சாப்பாடு: அமீனா ரபீக் ஆனந்தம் | விஸ்மாயா மோகன்லால் கதாநாயகியாக அறிமுகமாகும் தொடக்கம் படப்பிடிப்பு நிறைவு | என்னுடைய படம் பார்க்க தனுஷ் வந்தது ஏன் ? ; மிருணாள் தாக்கூர் வெளிப்படை பதில் | சிறை எனக்கு ஐந்தாம் வீடு போல ; ஜாமினில் விடுதலையான இயக்குனர் விக்ரம் பட் விளக்கம் | ‛கேஜிஎப்' இசையமைப்பாளருக்கு 35 லட்சம் மதிப்புள்ள கோல்டு வாட்ச் பரிசளித்த விஸ்வக் சென் |

இன்றைய தேதியில் சின்னத்திரையுலகின் செல்லக் குழந்தை ஷிவாங்கி தான். சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பாட வந்தவர். இப்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் துருதுருவென வலம் வந்து எல்லோரையும் கவர்ந்திருக்கிறார். அவரது குழந்தை முகமும், சின்ன சின்ன சேட்டைகளும் டி.வி.ரசிகர்களை கட்டிப்போட்டிருக்கிறது.
இந்த நிலையில் ஷிவாங்கி சிறுவயதில் தனக்கு நேர்ந்த அவமானங்கள் குறித்து கண்ணீர் மல்க கூறியிருப்பது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற நிகழ்ச்சியில் ஷிவாங்கி கலந்து கொண்டிருக்கிறார். இந்த நிகழ்ச்சியின் புரமோ வீடியோ வெளியாகி உள்ளது.
அதில் ஷிவாங்கி சிறு வயதில் தன் குரலை எல்லோரும் கேலி செய்தார்கள் என்றும் தன்னை ஒரு மாதிரியான பெண் என்று விமர்சனம் செய்தார்கள் என்றும், அவமானத்தால் துடித்தேன் என்றும் கண்ணீர் மல்க கூறியிருக்கிறார். அதேசமயம் இப்போது தன்னை தங்களது வீட்டில் உள்ள பிள்ளை போல் கொண்டாடுகிறார்கள் என தெரிவித்துள்ளார். அதோடு தற்போது சிவகார்த்திகேயனுடன் நடித்து வரும் ஷிவாங்கி, அடுத்து விஜய், அஜித்துடன் நடிக்க விரும்புவதாகவும் தெரிவித்திருக்கிறார். இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.




