தெலுங்கிலும் இன்று வெளியான பிரணவ் மோகன்லால் ஹாரர் படம் | சைபர் கிரைமில் சின்மயி புகார் | பிரித்விராஜின் விலாயத் புத்தா ரிலீஸ் தேதி அறிவிப்பு | விஜய் நடிக்க மறுத்து, பின்னர் அவரை வருத்தப்பட வைத்த 'ஆட்டோகிராப்' | மீண்டும் காற்று வாங்கும் சிங்கிள் தியேட்டர்கள் : நிலைமை மாறுமா ? | காப்பி போஸ்டர் சர்ச்சையில் சிக்கிய 'ஜனநாயகன்' | ஒரு பக்கம் மராத்தி பாடல், மறுபக்கம் ஆங்கிலப் படம்… இசையால் பேசவைக்கும் இளையராஜா | சினேகா திருமணத்தை நடத்தி வைத்தேன் : இயக்குனர் சேரன் | மல்டிபிளக்ஸ் தியேட்டர்களின் உணவு பொருட்கள் விலை : உச்சநீதிமன்றம் ஆதங்கம் | புதிய அப்டேட் கொடுத்த ராஜமவுலி |

லிங்குசாமி இயக்கிய முதல் படம் ஆனந்தம். 17 ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த இந்தப்படம், ஒரு கூட்டுக் குடும்பத்தின் கதை. மம்முட்டி, முரளி, அப்பாஸ் ஆகியோர் உடன் பிறந்த சகோதரர்கள். திருப்பதி என்ற பலசரக்கு கடை நடத்துவார்கள். அந்த வீட்டுக்கு மருமகள்களாக தேவயானி, ரம்பா, வந்த பிறகு கூட்டுக் குடும்பத்தில் என்னென்ன பிரச்சினைகள் வருகிறது என்பது அந்தப் படத்தின் கதை. தற்போது இதே பாணியில் ஒளிபரப்பாக இருக்கிறது பாண்டியன் ஸ்டோர் என்ற தொடர்.
இதில் அண்ணன் தம்பிகள் 4 பேர். மூத்த அண்ணன் ஸ்டாலின். அவரது மனைவி சுஜிதா. கணவனின் தம்பிகளை பெற்ற பிள்ளைகள் போல் பாதுகாக்கிறார் அண்ணி சுஜிதா. அடுத்தடுத்த தம்பிகளுக்கு திருமணம் நடக்கிறது. புதிய மருமகள்கள் வருகிறார்கள். அவர்களால் என்னென்ன பிரச்சினை வருகிறது. அதை ஸ்டாலினும், சுஜிதாவும் எப்படி சமாளிக்கிறார்கள் என்பது தான் பாண்டியன் ஸ்டோரின் கதை.
இதனை சிவா சேகர் இயக்குகிறார். வருகிற அக்டோபர் 1ந் தேதி முதல் விஜய் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகிறது. சீரியலுக்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்து ப்ரைம் டைமுக்குள் வரும்.