ராமாயணா டைட்டில் வீடியோ 9 நகரங்களில் வெளியாகிறது | நிவின் பாலி ஜோடியாக ப்ரீத்தி முகுந்தன் | 'எம்ஜிஆரின் பரிசுத்த நினைப்பே படத்தின் தலைப்பு'... “திருடாதே” | தெலுங்கில் லாபக் கணக்கை ஆரம்பித்த 'குபேரா' | சிம்பு - வெற்றிமாறன் படத்தின் அடுத்த அப்டேட் ? | தமிழ் இயக்குனர் ஷங்கரை மீண்டும் விமர்சிக்கும் தெலுங்கு சினிமா | பாலாஜி மோகன் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ் | வார் 2 : ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆர் இடையே நடன போட்டி? | போலீஸாக நடிக்கும் கவுதம் ராம் கார்த்திக் | கண்ணப்பா படத்திற்கு அடித்த ஜாக்பாட் |
லிங்குசாமி இயக்கிய முதல் படம் ஆனந்தம். 17 ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த இந்தப்படம், ஒரு கூட்டுக் குடும்பத்தின் கதை. மம்முட்டி, முரளி, அப்பாஸ் ஆகியோர் உடன் பிறந்த சகோதரர்கள். திருப்பதி என்ற பலசரக்கு கடை நடத்துவார்கள். அந்த வீட்டுக்கு மருமகள்களாக தேவயானி, ரம்பா, வந்த பிறகு கூட்டுக் குடும்பத்தில் என்னென்ன பிரச்சினைகள் வருகிறது என்பது அந்தப் படத்தின் கதை. தற்போது இதே பாணியில் ஒளிபரப்பாக இருக்கிறது பாண்டியன் ஸ்டோர் என்ற தொடர்.
இதில் அண்ணன் தம்பிகள் 4 பேர். மூத்த அண்ணன் ஸ்டாலின். அவரது மனைவி சுஜிதா. கணவனின் தம்பிகளை பெற்ற பிள்ளைகள் போல் பாதுகாக்கிறார் அண்ணி சுஜிதா. அடுத்தடுத்த தம்பிகளுக்கு திருமணம் நடக்கிறது. புதிய மருமகள்கள் வருகிறார்கள். அவர்களால் என்னென்ன பிரச்சினை வருகிறது. அதை ஸ்டாலினும், சுஜிதாவும் எப்படி சமாளிக்கிறார்கள் என்பது தான் பாண்டியன் ஸ்டோரின் கதை.
இதனை சிவா சேகர் இயக்குகிறார். வருகிற அக்டோபர் 1ந் தேதி முதல் விஜய் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகிறது. சீரியலுக்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்து ப்ரைம் டைமுக்குள் வரும்.