சூர்யா பட இயக்குனருடன் இணையும் விஜய் தேவரகொண்டா | எந்த நிலையிலும் உமக்கு மரணமில்லை : கண்ணதாசனை புகழ்ந்த கமல் | நான் ஒரு கிளீன் ஸ்லேட் : மமிதா பைஜு | ‛அரசன்' புரொமோ பயராக உள்ளது : அனிருத்திற்கு சிம்பு பாராட்டு | ‛ரெட்ட தல' படத்தின் கதைக்கரு இதுதான் : இயக்குனர் தகவல் | ஹீரோ அவதாரம் எடுக்கும் தேவி ஸ்ரீ பிரசாந்த் | கேரளா திரைப்பட விநியோகஸ்தர் சங்கத்திற்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் | ஒரு டஜன் வாழைப்பழம் மட்டும் சம்பளமாக பெற்றுக்கொண்டு நடித்த கோவிந்தா | பெண் குற்றச்சாட்டை தொடர்ந்து உதவி இயக்குனர் மீது காவல்துறையில் புகார் அளித்த துல்கர் சல்மான் நிறுவனம் | பாகுபலி : தி எபிக் ரன்னிங் டைம் சென்சார் சான்றிதழ் வெளியானது |
லிங்குசாமி இயக்கிய முதல் படம் ஆனந்தம். 17 ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த இந்தப்படம், ஒரு கூட்டுக் குடும்பத்தின் கதை. மம்முட்டி, முரளி, அப்பாஸ் ஆகியோர் உடன் பிறந்த சகோதரர்கள். திருப்பதி என்ற பலசரக்கு கடை நடத்துவார்கள். அந்த வீட்டுக்கு மருமகள்களாக தேவயானி, ரம்பா, வந்த பிறகு கூட்டுக் குடும்பத்தில் என்னென்ன பிரச்சினைகள் வருகிறது என்பது அந்தப் படத்தின் கதை. தற்போது இதே பாணியில் ஒளிபரப்பாக இருக்கிறது பாண்டியன் ஸ்டோர் என்ற தொடர்.
இதில் அண்ணன் தம்பிகள் 4 பேர். மூத்த அண்ணன் ஸ்டாலின். அவரது மனைவி சுஜிதா. கணவனின் தம்பிகளை பெற்ற பிள்ளைகள் போல் பாதுகாக்கிறார் அண்ணி சுஜிதா. அடுத்தடுத்த தம்பிகளுக்கு திருமணம் நடக்கிறது. புதிய மருமகள்கள் வருகிறார்கள். அவர்களால் என்னென்ன பிரச்சினை வருகிறது. அதை ஸ்டாலினும், சுஜிதாவும் எப்படி சமாளிக்கிறார்கள் என்பது தான் பாண்டியன் ஸ்டோரின் கதை.
இதனை சிவா சேகர் இயக்குகிறார். வருகிற அக்டோபர் 1ந் தேதி முதல் விஜய் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகிறது. சீரியலுக்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்து ப்ரைம் டைமுக்குள் வரும்.