'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
மலையாள சினிமாவில் நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் மீது நடிகைகள் பாலியல் புகார் கூறுவது அதிகரித்து வருகின்றன. அதுவும் முன்னணி நடிகை கடத்தல் சம்பவத்துக்கு பிறகு இது அதிகரித்துள்ளன.
கடந்த சில தினங்களுக்கு முன்பு நடிகை பார்வதி, நானும் கடத்தப்பட்டு துன்புறுத்தப்பட்டேன் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். இந்த நிலையில் நடிகை நிஷா சாரங்கன் பாலியல் புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
சினிமாவில் குணசித்ர வேடங்களில் நடிக்கும் நிஷா சாரங்கன், தற்போது ஒரு முன்னணி சேனலில் உப்பம் முலக்கும் என்ற காமெடி தொடரில் நடித்து வருகிறார். இந்த தொடரின் இயக்குனர் உன்னி கிருஷ்ணன் மீது அவர் பாலியல் புகார் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:
இயக்குனர் உன்னி கிருஷ்ணன் படப்பிடிப்பு தளங்களில் அடிக்கடி பாலியல் தொந்தரவு தந்து வந்தார். அதற்கு நான் கடும் எதிர்ப்பு தெரிவித்தேன். இருப்பினும் படப்பிடிப்பின்போது சில்மிஷங்களில் ஈடுபடுவார். இது குறித்து நான், டிவி சேனல் தலைமை நிர்வாகியிடம் புகார் செய்தும் பலன் இல்லை.
குடும்ப சூழ்நிலை கருதி அந்த தொடரில் தொடர்ந்து நடித்து வந்தேன். என்னை பலமுறை மரியாதை குறைவாக நடத்தினார். இந்நிலையில் என்னை தொடரில் இருந்து நீக்கியதாக உன்னி கிருஷ்ணன் தெரிவித்தார். இது எனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இந்த புகாரை அவர் மலையாள சினிமா பெண்கள் சங்கத்திற்கு அனுப்பி இருப்பதோடு, தனது பேஸ்புக்கிலும் பதிவிட்டிருக்கிறார். தொடர்ந்து நடிக்க வாய்ப்பு தருவதாகவும், தொடரின் இயக்குனரை மாற்றுவது குறித்து ஆலோசித்து வருவதாகவும் டிவி நிர்வாகம் தெரிவித்துள்ளது.