பிளாஷ்பேக்: “தீபாவளி” நாளன்று திரையில் தேசப்பற்றை விதைத்த “கப்பலோட்டிய தமிழன்” | அம்மாவுக்கும் மகளுக்கும் ஒரே நாளில் பிறந்தநாள் கொண்டாடிய மகிழ்ச்சியில் காவ்யா மாதவன் | பஹத் பாசிலின் கண்களில் தெரியும் வெறித்தனம் ; சிலாகிக்கும் ராஜமவுலியின் மகன் | தீபாவளி வாழ்த்து சொன்ன ரஜினிகாந்த் | அமிதாப் பச்சனின் தீபாவளி கொண்டாட்டத்தில் மகளுடன் ஆப்சென்ட் ஆன ஐஸ்வர்யா ராய் | ‛பேட்டில் ஆப் கல்வான்' படப்பிடிப்பில் சல்மான்கானுக்கு மொபைல் போன் அனுமதி மறுப்பு | இது ‛டியூட்' தீபாவளி: மத்தாப்பாய் மமிதா பைஜூ | 'என்ன சொல்ல போகிறார்(ய்)' தேஜூ அஸ்வினி | சேலை விற்றேன், மாடலிங் செய்தேன் : 'முல்லை' லாவண்யா | வாடும் மனசை பாட்டால் வருடி வலி போக்கும் மதுஐயர் |
புதிதாக தொடங்கப்பட்டுள்ள கலர்ஸ் தமிழ் சேனலில் வந்தாள் ஸ்ரீதேவி என்ற புதிய தொடர் கடந்த திங்கள்கிழமை முதல் ஒளிபரப்பாகி வருகிறது. இந்து தொடர் குறித்து கலர்ஸ் டி.வி விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:
நடிகர் ஆர்யாவுக்கு பெண் பார்க்கும் படலத்தை மையமாக கொண்டு நடத்தப்பட்ட எங்க வீட்டு மாப்பிள்ளை ஒரு புதிய சாதனை படைத்தது. இந்த நிலையில் ரசிகர்களின் அடுத்தகட்ட எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் வந்தாள் ஸ்ரீதேவி என்ற புதிய தொடரை தொடங்கியுள்ளோம்.
தொட்டதெல்லாம் துலங்க வைக்கும், பட்டதெல்லாம் பூக்க வைக்கும் அதிர்ஷ்ட தேவதையான ஸ்ரீதேவியை ஊரே கொண்டாடுகிறது. ஆனால் அவரது வீடோ அவரை வேலைக்காரி போல நடத்துகிறது. தங்களின் குடும்ப சுயநலனுக்காக ஸ்ரீதேவிக்கு மாப்பிள்ளை தேடும் சதியில் ஈடுபடுகிறார்கள். அதிலிருந்து ஸ்ரீதேவி எப்படி மீண்டு வருகிறார். அவருக்கு பிடித்த ராஜகுமாரனை கரம்பிடித்தாரா? அவளின் எதிர்பார்ப்புகள் நிறைவேறியதா? என்கிற கதையோடு இதுவரை கையாளப்படாத களத்தில் இந்த சீரியல் பயணிக்கும், திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும். இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.