ஆடி வெள்ளி ரீமேக்கில் நயன்தாராவுக்கு பதில் திரிஷா | இளையராஜா வீட்டு மருமகள் ஆகி இருக்கணும்... : புது குண்டு போட்ட வனிதா, நடந்தது என்ன? | அனுபவசாலிகள் இல்லாத கட்சி வெற்றி பெறாது : சொல்கிறார் நடிகர் ரஜினி | ஷங்கரின் கனவுப்படம் 'வேள்பாரி' : தயாரிக்கப் போவது யார் ? | 'மோனிகா' பூஜாவை விட ரசிகர்களைக் கவர்ந்த சவுபின் ஷாகிர் | பிளாஷ்பேக் : அருக்காணியால் தயங்கிய பாக்யராஜ் | பிளாஷ்பேக் : அதிக சம்பளம் பெற்ற கதாசிரியர் | குரு பூர்ணிமாவில் அமிதாப் பச்சன் சிலையை வைத்து வழிபாடு | "நான்தான் பர்ஸ்ட்" என்ற ராஷ்மிகாவின் கருத்துக்கு எதிர்ப்பு | எனக்கு வராத சம்பளத்தை கொண்டு இரண்டு படங்கள் தயாரிக்கலாம்: கலையரசன் வருத்தம் |
ஜீ தமிழ் சேனலில் இன்று முதல் ஒளிபரப்பாகும் புதிய தொடர் ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி. வித்தியாசமான கதை களத்தை கொண்ட தொடராக இது உருவாகி ஒளிபரப்பாக இருக்கிறது.
சராசரிக்கும் கூடுதலாக குண்டான பெண் ராசாத்தி. அன்பானவள், தைரியமானவள் என்றாலும் தன் மகளின் தோற்றத்தால் அவளுக்கு எப்படி திருமணமாகும், அவள் எதிர்காலம் எப்படி இருக்குமோ என்று கவலை கொள்கிறார் தாயான செண்பகவல்லி. ஆனால் ஒரே நேரத்தில் எல்லாம் மாறுகிறது. ராசத்தி கபடி வீரர் இனியனை திருமணம் செய்கிறார். அதன் பிறகு அவர் வாழ்க்கை எப்படி இருக்கிறது என்பதுதான் தொடரின் கதை.
இதில் ராசாத்தியாக புதுமுகம் அஸ்வினி நடிக்கிறார், அவரது தாய் செண்பகவல்லியாக சபீதா ஆனந்த் நடிக்கிறார், ராசாத்தி கணவர் இனியனாக வசந்த் நடிக்கிறார். ஆர்.தேவேந்திரன் இயக்குகிறார். ஜானி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.