சூர்யா பட இயக்குனருடன் இணையும் விஜய் தேவரகொண்டா | எந்த நிலையிலும் உமக்கு மரணமில்லை : கண்ணதாசனை புகழ்ந்த கமல் | நான் ஒரு கிளீன் ஸ்லேட் : மமிதா பைஜு | ‛அரசன்' புரொமோ பயராக உள்ளது : அனிருத்திற்கு சிம்பு பாராட்டு | ‛ரெட்ட தல' படத்தின் கதைக்கரு இதுதான் : இயக்குனர் தகவல் | ஹீரோ அவதாரம் எடுக்கும் தேவி ஸ்ரீ பிரசாந்த் | கேரளா திரைப்பட விநியோகஸ்தர் சங்கத்திற்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் | ஒரு டஜன் வாழைப்பழம் மட்டும் சம்பளமாக பெற்றுக்கொண்டு நடித்த கோவிந்தா | பெண் குற்றச்சாட்டை தொடர்ந்து உதவி இயக்குனர் மீது காவல்துறையில் புகார் அளித்த துல்கர் சல்மான் நிறுவனம் | பாகுபலி : தி எபிக் ரன்னிங் டைம் சென்சார் சான்றிதழ் வெளியானது |
ஜீ தமிழ் சேனலில் இன்று முதல் ஒளிபரப்பாகும் புதிய தொடர் ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி. வித்தியாசமான கதை களத்தை கொண்ட தொடராக இது உருவாகி ஒளிபரப்பாக இருக்கிறது.
சராசரிக்கும் கூடுதலாக குண்டான பெண் ராசாத்தி. அன்பானவள், தைரியமானவள் என்றாலும் தன் மகளின் தோற்றத்தால் அவளுக்கு எப்படி திருமணமாகும், அவள் எதிர்காலம் எப்படி இருக்குமோ என்று கவலை கொள்கிறார் தாயான செண்பகவல்லி. ஆனால் ஒரே நேரத்தில் எல்லாம் மாறுகிறது. ராசத்தி கபடி வீரர் இனியனை திருமணம் செய்கிறார். அதன் பிறகு அவர் வாழ்க்கை எப்படி இருக்கிறது என்பதுதான் தொடரின் கதை.
இதில் ராசாத்தியாக புதுமுகம் அஸ்வினி நடிக்கிறார், அவரது தாய் செண்பகவல்லியாக சபீதா ஆனந்த் நடிக்கிறார், ராசாத்தி கணவர் இனியனாக வசந்த் நடிக்கிறார். ஆர்.தேவேந்திரன் இயக்குகிறார். ஜானி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.