'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
சின்னத்திரையின் நட்சத்திர தொகுப்பாளினி அஞ்சனா. கடந்த 10 ஆண்டுகளாக ஒரே மியூசிக் சேனலில் தொகுப்பாளினியாக இருந்தார். அதோடு பொது வெளிகளில் நடக்கும் திரைப்படம் தொடர்பான விழாக்களில் தொகுப்பாளராகவும் இருந்தார். தற்போது அஞ்சனா, திடீரென தான் பணியாற்றிய சேனலில் இருந்து வெளியேறி விட்டார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் தெரிவித்திருப்பதாவது:
சொந்த காரணங்களுக்காக விடைபெறுகிறேன். தொகுப்பாளினியாக கடந்த 10 ஆண்டுகால பயணத்தில் மகிழ்ச்சி, அன்பு, சண்டை, ஏற்றம், இறக்கம் என எல்லாவித அனுபவங்களும் இருந்தது. என்மீது அளவு கடந்த அன்பு கொண்ட எல்லோருக்கும் கடன்பட்டிருக்கிறேன் என்று எழுதியிருக்கிறார்.
சின்னத்திரையில் இருந்து விலகினாலும் பொது விழாக்களில் தொகுப்பாளராக தொடர்ந்து பணியாற்ற முடிவு செய்திருக்கிறார். விலகலுக்கான காரணத்தை அஞ்சனா வெளிப்படையாக தெரிவிக்கவில்லை. இன்னும் சில மாதங்களில் அதைச் சொல்கிறேன் என்று கூறியுள்ளார். அஞ்சனாவுக்கும், நடிகர் கயல் சந்திரனுக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடந்தது.