ஊழல் அரசியல்வாதிகளை தட்டிக் கேட்கும் ‛ஜனநாயகன்' | ஆபாச வெப் சீரிஸ் : 25 ஓடிடி தளங்களுக்கு மத்திய அரசு தடை | ‛விஸ்வாம்பரா' படத்தில் சிறப்பு பாடலுக்கு நடனமாடும் மவுனி ராய் | கதையில் சமரசம் செய்யாத ராஜமவுலி : பிருத்விராஜ் வெளியிட்ட தகவல் | டியூட் படத்தில் சிவகார்த்திகேயனா? வைரலாகும் வீடியோ | கூலி படத்தில் கமலா... : லோகேஷ் கனகராஜ் அளித்த பதில் | தற்கொலைக்கு முயற்சித்தாரா ‛டிக் டாக்' இலக்கியா... : ஸ்டன்ட் இயக்குனர் மீது குற்றச்சாட்டு | மீண்டும் இசையில் கவனம் செலுத்தப் போகிறேன்: விஜய் ஆண்டனி | மீண்டும் ‛அந்த 7 நாட்கள்' படத்தில் நடிக்கும் கே.பாக்யராஜ் | பிளாஷ்பேக் : ஒரே தமிழ் படத்தில் நடித்த வங்காள நடிகர் |
சின்னத்திரையில் செய்தி வாசிப்பாளராகவும், நிகழ்ச்சி தயரிப்பாளராகவும் வலம் வந்து கொண்டிருக்கிறார் ஐஸ்வர்யா ராகவ். அவர் இப்போது ஒரு புதிய திட்டத்தை செயல்படுத்தி வருகிறார். அதாவது தொடர்ந்து 100 நாட்களுக்கு கைத்தறி புடவைகள் அணிந்து அதனை செல்பி எடுத்து தனது பேஸ்புக் டுவிட்டரில் வெளியிட்டு வருகிறார். இதற்கு 100 டேய்ஸ் சாரீஸ் என்று தலைப்பும் கொடுத்துள்ளார். ஐஸ்வர்யா ராகவின் இந்த சேலை அணிவகுப்பு லைக்குகளை குவித்து வருகிறது.
"இப்போதெல்லாம் சேலை அணிவது குறைந்து வருகிறது. குடும்ப விழாக்களில் மட்டுமே சேலை அணிகிறார்கள். எல்லா நேரத்திலும் சேலை அணியவேண்டும் என்கிற விழிப்புணர்வை ஏற்படுத்தவே இந்த முயற்சியில் இறங்கினேன். நம் பாரம்பரியத்தை பாதுகாக்கும் ஒரு சிறிய முயற்சி இது. இதை நான்தான் கண்டுபிடித்தேன் என்ற சொல்ல மாட்டேன், சில பெண்கள் பேஸ்புக்கில் இதற்கென தனி பக்கத்தையே உருவாக்கி படங்களை பதிவிட்டு வருகிறார்கள். நான் 100 நாள் 100 சேலை அணிகிறேன். இதற்கு 100 சேலை தேவையில்லை. ஒரே சேலையை இரண்டு விதமாக அணியலாம்" என்கிறார் ஐஸ்வர்யாராகவ்.