மலையாள திரைப்பட விழா நடுவர் மீது பாலியல் புகார் | மகன் மற்றும் நிவின்பாலியுடன் தனி விமானத்தில் பயணித்த மோகன்லால் | உயர் நீதிமன்றத்திலும் நடந்ததை சொல்வேன் : நடிகை வழக்கு குறித்து நடிகர் லால் திட்டவட்டம் | பிளாஷ்பேக்: வில்லனையும், நாயகியையும் முன்னிறுத்திய எம்ஜிஆர் | பிளாஷ்பேக்: முத்தான மூன்று சுப்புலக்ஷ்மிகளை வெள்ளித்திரைக்குத் தந்த இயக்குநர் கே சுப்ரமணியம் | மீண்டும் புதிய படங்களில் நடிப்பதற்கு தயாராகும் கியாரா அத்வானி! | விரைவில் கைதி 2 : கார்த்தி கொடுத்த அப்டேட் | ‛வா வாத்தியார்' பட ரிலீசிற்கு தடை நீட்டிப்பு | ரத்னகுமாரின் '29' | ரக்ஷன், ஆயிஷாவின் ‛மொய் விருந்து' : முதல் பார்வை வெளியீடு |

கன்னட திரைப்படம் மற்றும் தொடர்களில் நடித்து புகழ்பெற்ற ரேகா குமார், மலையாள தொடருக்கும் சென்று அங்கும் வெற்றிக்கொடி நாட்டிவிட்டு தற்போது தமிழ் சீரியல்களில் வில்லியாக முகாமிட்டிருக்கிறார். நடிப்புத் துறையில் 20 வருட அனுபவமிக்க சீனியர். பாரிஜாதம் தொடரில் வில்லியாக நடித்தவர் தற்போது தெய்வமகளில் வில்லியாக நடித்து வருகிறார்.
கன்னடத்தில் 40 தொடர்களிலும், மலையாளத்தில் 10 தொடர்களிலும் வில்லியாக நடித்த ரேகா குமார், சின்னத்திரையின் நிரந்தர வில்லி. தொடர்ந்து வில்லி வேடங்களில் தினமும் நடிப்பதால் வீட்டிற்கு சென்றாலும் வில்லி மூடுதான் இருக்கிறதாம். இதனால் வில்லி கேரக்டர்களின் எபெக்ட் வீட்டுக்குள் வராமல் இருக்க தினமும் காலை மலையில் தியானம் செய்கிறார். தற்போது அது நல்ல பலன் கொடுப்பதாக தெரிவித்திருக்கிறார் ரேகா குமார்.