ஒவ்வொரு முறையும் உங்களை தேர்வு செய்வேன் : நயன்தாரா | சிறப்பு தோற்றத்தில் நடிக்க டேவிட் வார்னருக்கு 2.5 கோடி சம்பளம் | 'பேடி' : ராம் சரணின் 16வது படத்தின் தலைப்பு | எல் 2 எம்புரான் - முதல் தகவல் அறிக்கை | வீர தீர சூரன் ரிலீஸில் ஏற்பட்ட சிக்கல் : மன்னிப்பு கேட்ட இயக்குனர் அருண் குமார் | 'டெஸ்ட்' படத்தில் எனது கேரக்டர் ராகுல் டிராவிட்டுக்கு சமர்ப்பணம் : சித்தார்த் | கண்ணப்பா படத்தை கிண்டல் செய்தால் சிவனின் கோபத்திற்கு ஆளாவீர்கள்: நடிகர் ரகு பாபு சாபம் | எனக்கும் காசநோய் பாதிப்பு இருந்தது : சுஹாசினி தகவல் | மம்முட்டிக்காக, மோகன்லால் பிரார்த்தனை செய்த தகவலை நாங்கள் வெளியிடவில்லை : தேவசம் போர்டு மறுப்பு | பிளாஷ்பேக்: வெளியான அனைத்து படங்களும் ஹிட்டான தீபாவளி |
‛பாரதி கண்ணம்மா' தொடரின் மூலம் சின்னத்திரை ஹீரோவாக அறிமுகமானவர் அருண். அதேபோல் ‛ராஜா ராணி 2' தொடரில் வில்லியாக எண்ட்ரி கொடுத்து அசத்தியவர் வீஜே அர்ச்சனா. இவர்கள் இருவரும் காதலித்து வரும் தகவல் சில ஆண்டுகளுக்கு முன்பே விஜய் டிவி விருது நிகழ்ச்சியின் மூலம் வெளியானது. எனினும், இருவரும் இதுகுறித்து அதிகாரப்பூர்வமாக எந்தவொரு தகவலையும் அறிவித்ததில்லை. அதேபோல் இன்ஸ்டாகிராமிலும் இருவரும் சேர்ந்து புகைப்படங்கள் எதையும் வெளியிட்டதில்லை.
அண்மையில் நிறைவுற்ற பிக்பாஸ் சீசன் 8ல் அருண் பிரசாத் போட்டியாளராக கலந்து கொண்டபோது தான் அர்ச்சனா, அருண் பிரசாத் தான் தனது வாழ்க்கை என அறிவித்தார். இந்நிலையில், நேற்றைய தினம் காதலர் தினத்தை முன்னிட்டு அருண் பிரசாத் அர்ச்சனாவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை வெளியிட்டு தனது 5 வருட காதல் வாழ்க்கை குறித்து பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் அர்ச்சனாவுக்கு தனது காதலர் தின வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார்.