மாற்றி அறிவிக்கப்பட்ட மம்முட்டியின் பஷூக்கா ரிலீஸ் தேதி | 9 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் பிரித்விராஜ் படத்தை இயக்கும் ஜீத்து ஜோசப் | கேரள கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட நாகசைதன்யா | துல்கர் சல்மான் படம் மூலம் மீண்டும் டைரக்சனுக்கு திரும்பும் மின்னல் முரளி ஒளிப்பதிவாளர் | பிளாஷ்பேக் : மூன்றாம் பிறை படத்திற்காக ஸ்ரீதேவிக்கு தேசிய விருது கிடைக்காதது ஏன்? | பிளாஷ்பேக் : ஒரே பிரேமில் 5 சின்னப்பா : 80 வருடங்களுக்கு முன்பே தொழில்நுட்ப சாதனை | எப்படி இருந்த ஷிவானி இப்படி ஆகிட்டாங்களே | ரஞ்சனி சீரியலில் பவித்ரா ஜனனி என்ட்ரியா? | மெளன ராகம் ஜோடி இப்போது ரியல் ஜோடி ஆகிறார்கள் | சினிமாவில் பட்ட அவமானம் : மனம் திறக்கும் மூசா அபிலாஷ் |
குண்டு குண்டு கண்ணங்களுடன் மான் விழி போன்ற கண்களுடன் செஞ்சு வைத்த சிலை போல் பகல்நிலவு சீரியல் மூலம் சின்னத்திரைக்கு நடிக்க வந்தவர் தான் ஷிவானி நாராயணன். முதல் தொடரிலேயே தன் அழகாலும், திறமையான நடிப்பாலும் ரசிகர்களை தன் வசப்படுத்தினார். தொடர்ந்து சீரியல்களிலும் சின்னத்திரை நிகழ்ச்சிகளிலும் தோன்றிய ஷிவானி, பிக்பாஸ் சீசன் 4-ல் கலந்து கொண்டு மிகப்பெரிய அளவில் பெயரும் புகழும் பெற்றார்.
பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியே வந்த கையோடு சினிமாக்களில் நடிக்க ஆரம்பித்த ஷிவானிக்கு ரசிகர்களின் ஆதரவும் பெருகியது. பலரும் ஷிவானிக்காக லைக்ஸ்களை பறக்கவிட்டனர். இதனால் தொடர்ச்சியாக திரைப்படங்களில் நடிக்க வேண்டுமென அதில் மட்டுமே கவனம் செலுத்தி, ஆரம்பித்த ஷிவானி, அதற்காக உடல் எடை குறைப்பதற்காக ஜிம் செல்வதிலிருந்து, மாடலிங், கவர்ச்சியான போட்டோஷுட்டுகள் என தன்னை முற்றிலும் மாற்றிக்கொண்டார்.
ஒருகட்டத்தில் அழகாக வேண்டுமென இவர் எடுத்த முயற்சிகள் இவருக்கே எதிராக திரும்பியது. அவரது அழகிய முகத்தோற்றம் கொஞ்சம் கொஞ்சமாக மாற ஆரம்பித்தது. அப்போதே ரசிகர்கள் பலரும் இவர் முகத்திற்கு ஆப்ரேஷன் செய்கிறாரா? என கேள்விகள் கேட்க ஆரம்பித்தனர்.
இந்நிலையில், ஷிவானி அண்மையில் வெளியிடும் புகைப்படங்களில் அவரது முகத்தோற்றமே முற்றிலும் மாறியிருப்பதை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சியாகி வருகின்றனர். ஒருகாலத்தில் ஷிவானியின் இன்ஸ்டாகிராம் புகைப்படங்களுக்காக தவம் கிடந்த ரசிகர்களே தற்போது அவரது புகைப்படங்களை பார்த்து 'எப்படி இருந்த ஷிவானி இப்ப இப்படி ஆகிட்டாங்கேளே?' என பரிதாபமாக பதிவிட்டு வருகின்றனர்.