சிக்கந்தர் தோல்விக்கு காரணம் முருகதாஸா ? சல்மான் கானா ? ; ராஷ்மிகா பதில் | 'சர்வம் மாயா' இயக்குனரின் அடுத்த படத்திலும் இணையும் நிவின்பாலி | வந்தே மாதரம் பாடலை பாட ஏ.ஆர் ரஹ்மான் மறுத்தாரா ? சின்மயி பதில் | மோகன்லால் படத்தை இயக்கும் பஹத் பாசிலின் ஆஸ்தான இயக்குனர் | நடிகரை அறைந்தாரா பூஜா ஹெக்டே? தீயாக பரவும் செய்தி | ஏப்ரல் 30ல் திரைக்கு வரும் தனுஷின் 'கர'? | ஓடிடியில் ஹிந்தியில் மட்டுமே வெளியான 'பாகுபலி தி எபிக்' | 'பார்டர்-2' படத்துடன் வெளியாகும் துரந்தர் -2 படத்தின் டீசர்! | ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஆதரவாக குரல் கொடுத்த மெஹபூபா முப்தி! | மீண்டும் தெலுங்கு படத்தில் நடிக்கும் பிரிகிடா சகா! |

90-ஸ் கிட்ஸ்களின் பேவரைட் தொடரான மைடியர் பூதம் தொடரில் மூசா என்கிற கதாபத்திரத்தில் நடித்து பிரபலமானவர் தான் அபிலாஷ். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான அவரை அண்மையில் வெளியான குடும்பஸ்தன் படத்தில் மாணிக்சந்த் கதாபாத்திரத்தில் பார்த்து பலரும் வியந்தனர். ஆனால், இந்த படத்திற்கு முன்பாகவே அபிலாஷ் இரண்டு படங்களில் நடித்திருக்கிறார். ஆனாலும், அவர் சிறிது காலம் திரைத்துறையை விட்டு விலகியிருந்தார். அதுகுறித்தான தகவலை அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் அபிலாஷே கூறியிருக்கிறார்.
அவர் அளித்த அந்த பேட்டியில், 'நான் குழந்தையாக இருக்கும் போதே சினிமாவில் நடிக்க ஆசைப்பட்டேன். சென்னைக்கு வந்து அப்பாவுடன் வாய்ப்பு தேடி அலைந்தேன். அப்போதே பல அவமானங்களை சந்தித்தேன். கடைசியில் மை டியர் பூதம் தொடரில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இதனால் ஸ்கூலுக்கு போக முடியாமல் போனது. அந்த தொடர் முடிந்தவுடன் படிப்பு தான் முக்கியம் என படிக்க சென்றுவிட்டேன். அதன்பிறகு ஆரி சார் நடித்த நாகேஷ் திரையரங்கம் படத்தில் வில்லனாக நடித்திருந்தேன். அதனை தொடர்ந்து தோனி கபடி குழு படத்திலும் நடித்தேன். அடுத்ததாக ஒரு படத்தில் கமிட்டாக இருந்த போது தான் ஒரு தயாரிப்பாளர் இவனுக்கு என்ன மார்க்கெட் இருக்கிறது. இவனை வைத்து படம் பன்றீங்க? என்று கேட்டார். அது எனக்கு பெரிய மன கஷ்டத்தை கொடுத்தது.
மார்க்கெட் என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரிவதற்காகவே புரொடக்ஷன் பக்கம் வந்தேன். குடும்பஸ்தன் படத்தின் தயாரிப்பு நிறுவனத்தில் எக்ஸிக்யூட்டில் புரொடியசராக வேலை பார்த்து வந்த என்னை, நடிகர் பிரசன்னா சார் தான் மாணிக்சந்த் கேரக்டரில் நடிக்க வைக்க சிபாரிசு செய்தார். மாணிக்சந்த் கதாபாத்திரத்தில் நான் நடித்ததை பார்த்து பலரும் என்னை பாராட்டுகிறார்கள். பலர் மைடியர் பூதம் மூசா என்று என்னை அடையாளப்படுத்துவது இப்போதும் என்னை ஞாபகம் வைத்திருக்கிறார்களே என்று மகிழ்ச்சியாக இருக்கிறது' என அந்த பேட்டியில் அபிலாஷ் கூறியுள்ளார்.




