விஜய் நடித்த 'உன்னை நினைத்து' காட்சிகளைப் பகிர்ந்த விக்ரமன் | ஜன.,10க்கு தள்ளிப்போகிறதா 'ஜனநாயகன்'? | 'அகண்டா 2' மாதிரி ஆகிடுமா ஜனநாயகன் | ஜனவரி 30ல் வெளியாகும் ஜீத்து ஜோசப் படம் | நஷ்டமடைந்த 'ஏஜென்ட்' பட தயாரிப்பாளர், வினியோகஸ்தர்களுக்கு அகில் கொடுத்த வாக்குறுதி | ஆயிரம் படங்களில் நடித்த மூத்த மலையாள நடிகர் காலமானார் | 'மன சங்கர வர பிரசாத் காரு' படத்தின் மெகா புரமோஷனில் சிரஞ்சீவி கலந்து கொள்வாரா? | மூன்று வருடங்களுக்குப் பிறகு விஜய் பட நடிகையிடம் மன்னிப்பு கேட்ட புஷ்பா நடிகை | மீண்டும் சந்தித்த 'படையப்பா' படை | திரைப்பட பாடலாக உருவான சீமானின் மேடை பாட்டு |

ஜீ தமிழ் சேனலில் கடந்த 20ம் தேதி முதல் 'கெட்டிமேளம்' மற்றும் 'மனசெல்லாம்' என இரண்டு புதிய தொடர்கள் ஒளிப்பாகிறது. மதியம் 2.30 மணிக்கு 'மனசெல்லாம்' தொடரும், இரவு 7.30 மணிக்கு 'கெட்டிமேளம்' தொடரும் ஒளிபரப்பாகிறது. வாரந்தோறும் திங்கள் முதல் வெள்ளி வரை இந்த தொடர்கள் ஒளிபரப்பாகும்.
மனசெல்லாம் தொடர் விருதுநகர் அருகே உள்ள ஒரு அழகிய கிராமத்தில் நடக்கும் கதை. குடும்பத் தலைவரான ராஜ சுந்தரம், தனது குடும்பத்தில் இரண்டு திருமணங்களை ஏற்பாடு செய்யத் திட்டமிடுகிறார். அதில் ஒரு திருமணத்தின் மணப்பெண் ஒரு காதலில் இருப்பதால் இரு திருமணங்களுமே சிக்கலாகிறது. இதனை எப்படி சமாளித்து திருமணத்தை அவர் நடத்துகிறார் என்பது கதை. தீபக், ஜெய்பாலா மற்றும் வானதி ஆகியோர் நடிக்கிறார்கள்.
கெட்டிமேளம் தொடரின் நாயகன் பொன்வண்ணன். நாயகி பிரவீணா. இவர்களுக்கு தங்களின் கனவு வீட்டை கட்டுவதும், தங்கள் மகள் திருமணத்தை பிரமாண்டமாக நடத்துவதும்தான் இலக்கு. அதை நோக்கி எப்படி பயணிக்கிறார்கள் என்பது கதை. சாயா சிங், சவுந்தர்யா ரெட்டி, சிபு சூர்யன் மற்றும் விராத் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.