பிரதீப் ரங்கநாதன் படத்தில் கதையின் நாயகியாக மமிதா பைஜூ | சமூகத்தை திருப்திப்படுத்த திருமணம் செய்ய மாட்டேன் : சிம்பு | பிச்சைக்காரன் 3 பிரமாண்டமாக உருவாகும் : விஜய் ஆண்டனி | காதலர் தினத்தில் வெளியாகும் சீதா பயணம் படத்திற்கு யு சான்றிதழ் | ரஜினி, கமல் இணையும் படம் : மகள்கள் பங்கு இருக்குமா? | உயிருள்ளவரை உஷா ரீ ரிலீஸ் : வாய்ஸ் கொடுப்பாரா சிம்பு | ரஜினிகாந்த் பாராட்டினார்: 'வித் லவ்' காவ்யா நெகிழ்ச்சி | 'ஜனநாயகன்' பிப்ரவரியில் ரிலீசா? | பிப்ரவரி 12ல் ஓடிடியில் 'தலைவர் தம்பி தலைமையில்' | 'இது ஒன்னும் தியேட்டர் கிடையாது': அறிவுரை கூறிய அஜித் |

ஜீ தமிழ் சேனலில் கடந்த 20ம் தேதி முதல் 'கெட்டிமேளம்' மற்றும் 'மனசெல்லாம்' என இரண்டு புதிய தொடர்கள் ஒளிப்பாகிறது. மதியம் 2.30 மணிக்கு 'மனசெல்லாம்' தொடரும், இரவு 7.30 மணிக்கு 'கெட்டிமேளம்' தொடரும் ஒளிபரப்பாகிறது. வாரந்தோறும் திங்கள் முதல் வெள்ளி வரை இந்த தொடர்கள் ஒளிபரப்பாகும்.
மனசெல்லாம் தொடர் விருதுநகர் அருகே உள்ள ஒரு அழகிய கிராமத்தில் நடக்கும் கதை. குடும்பத் தலைவரான ராஜ சுந்தரம், தனது குடும்பத்தில் இரண்டு திருமணங்களை ஏற்பாடு செய்யத் திட்டமிடுகிறார். அதில் ஒரு திருமணத்தின் மணப்பெண் ஒரு காதலில் இருப்பதால் இரு திருமணங்களுமே சிக்கலாகிறது. இதனை எப்படி சமாளித்து திருமணத்தை அவர் நடத்துகிறார் என்பது கதை. தீபக், ஜெய்பாலா மற்றும் வானதி ஆகியோர் நடிக்கிறார்கள்.
கெட்டிமேளம் தொடரின் நாயகன் பொன்வண்ணன். நாயகி பிரவீணா. இவர்களுக்கு தங்களின் கனவு வீட்டை கட்டுவதும், தங்கள் மகள் திருமணத்தை பிரமாண்டமாக நடத்துவதும்தான் இலக்கு. அதை நோக்கி எப்படி பயணிக்கிறார்கள் என்பது கதை. சாயா சிங், சவுந்தர்யா ரெட்டி, சிபு சூர்யன் மற்றும் விராத் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.




