சிவகார்த்திகேயனுக்கு கண்டனம் தெரிவித்த சிவாஜி சமூக நலப்பேரவை | பொங்கல் போட்டியில் முக்கிய கதாநாயகிகள் | முன்பதிவில் ஜனநாயகன் செய்த சாதனை | 300வது படத்தை எட்டிய யோகி பாபு | மீண்டும் ரசிகர்களை ஏமாற்றிய கருப்பு | 75 கோடி வசூலை கடந்த சர்வம் மாயா | ஜனநாயகன் ரீமேக் படமா ? பகவத் கேசரி இயக்குனர் பதில் | ரிஷப் ஷெட்டி படத்தில் இருந்து விலகி விட்டேனா ? ஹனுமன் நடிகர் மறுப்பு | பிரபாஸிற்கு வில்லனாக நடிக்கும் ஈரானிய நடிகர் | சைரா நரசிம்ம ரெட்டி பட இயக்குனருடன் கைகோர்க்கும் பவன் கல்யாண் |

மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற ஆனந்த ராகம் தொடர் கடந்த 2022ம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் ஹீரோயின் கதாபத்திரத்திற்கு அடுத்தப்படியாக, ஹீரோயினின் வாய் பேச முடியாத தங்கை அபியின் கதாபத்திரமும் அதிக முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த அபி கதாபத்திரத்தில் 750 எபிசோடுகளில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் ஸ்வேதா.
இந்நிலையில், இவர் தனது இன்ஸ்டாகிராமில் வெளியிடுள்ள பதிவில், தன் வாழ்க்கையின் முக்கிய கட்டத்திற்கு வந்திருப்பதாகவும், அதற்காக தனது சினிமா வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கப் போவதாகவும் பதிவிட்டு ஆனந்தராகம் தொடரிலிருந்து விலகிவிட்டதாக கூறியுள்ளார்.
அண்மையில் தான் ரோஜா 2 தொடரிலும் ஸ்வேதா என்ட்ரி கொடுத்து நடிக்க ஆரம்பித்தார். ஆனால் அதற்குள் அவர் சினிமா கேரியரிலிருந்து முற்றிலும் விலகியுள்ளதாக தெரிவித்திருப்பது அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.