பிளாஷ்பேக்: முத்தான மூன்று சுப்புலக்ஷ்மிகளை வெள்ளித்திரைக்குத் தந்த இயக்குநர் கே சுப்ரமணியம் | மீண்டும் புதிய படங்களில் நடிப்பதற்கு தயாராகும் கியாரா அத்வானி! | விரைவில் கைதி 2 : கார்த்தி கொடுத்த அப்டேட் | ‛வா வாத்தியார்' பட ரிலீசிற்கு தடை நீட்டிப்பு | ரத்னகுமாரின் '29' | ரக்ஷன், ஆயிஷாவின் ‛மொய் விருந்து' : முதல் பார்வை வெளியீடு | பிளாஷ்பேக்: படிக்க வந்த இடத்தில் நடிக்க வாய்ப்பு; “காதலிக்க நேரமில்லை” நாயகன் ஆனார் ரவிச்சந்திரன் | கதையின் நாயகன் ஆன சூரி பட இயக்குனர் | கார்த்திக்கு கதை சொன்ன நானி பட இயக்குனர் | வி சாந்தாராம் பயோபிக்கில் ஜெயஸ்ரீ கதாபாத்திரத்தில் தமன்னா |

மக்களின் அமோக வரவேற்பை பெற்ற எதிர்நீச்சல் தொடரின் சீசன் 2 மிக விரைவில் வெளியாகவுள்ளது. இதில் ஹீரோயின் உட்பட பல நடிகர்கள் மாறிவிட்டனர். ஜனனியாக நடித்து வந்த மதுமிதாவுக்கு பதிலாக பார்வதி, ஐஸ்வர்யாவாக நடித்து வந்த ஐஸ்வர்யாவுக்கு பதில் ஜானு என தாராவாக நடித்து வந்த சிறுமிவரை பல நடிகர்கள் மாற்றம் நடைபெற்றுள்ளது.
இந்நிலையில் விசாலாட்சி கதாபாத்திரத்தில் நடித்து வந்த சத்யாப்ரியா தனது இன்ஸ்டாகிராமில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், 'நான் எதிர்நீச்சல் தொடரில் நடிக்கவில்லை என்றால் யாராவது வருத்தப்படுவீர்களா? யார் என்னை மிஸ் செய்ய போகிறீர்கள்' என்று கேட்டிருந்தார். இதனைதொடர்ந்து ரசிகர்கள் பலரும் சத்யப்ரியா நடிக்க வேண்டும் என்று கேட்க, அடுத்ததாக வெளியிட்டுள்ள பதிவில் நான் இல்லாமல் எதிர்நீச்சல் சீரியலா? என கெத்தாக கேட்டுள்ளார். இதன்மூலம் விசாலாட்சி கதாபாத்திரத்தில் சத்யப்ரியா தொடர்ந்து நடிக்கிறார் என்பது உறுதியாகியுள்ளது.