சவுந்தர்யா பயோபிக் படத்தில் நடிக்க ஆசைப்படும் பிரியங்கா மோகன் | சிம்பு, தனுஷ் மோதல் இருக்கிறதா : சமுத்திரக்கனி பதில் | விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகாவின் ‛ரணபலி' படத்தின் முதல் பாடல் வெளியானது | துரந்தர் 2 படத்தின் முதல் விமர்சனத்தை வெளியிட்ட யாமி கவுதம் | மார்ச் 6ல் ஜீ5 ஓடிடியில் வெளியாகும் காந்தி டாக்ஸ் | பிரதமர் மோடியுடன் சந்திப்பு குறித்து ராஷ்மிகா நெகிழ்ச்சி | ஜேசன் சஞ்சய் இயக்கும் 'சிக்மா' : ஆரம்பமானதன் வரலாறு… | அதிக லைக்குகள் பெற்ற ராஷ்மிகா திருமணப் பதிவு | தென்னிந்திய இயக்குனரை தேடும் ஹிருத்திக் ரோஷன் | ரோஸ்லின் வெப் சீரிஸுக்காக எடையை குறைத்த மீனா |

மக்களின் அமோக வரவேற்பை பெற்ற எதிர்நீச்சல் தொடரின் சீசன் 2 மிக விரைவில் வெளியாகவுள்ளது. இதில் ஹீரோயின் உட்பட பல நடிகர்கள் மாறிவிட்டனர். ஜனனியாக நடித்து வந்த மதுமிதாவுக்கு பதிலாக பார்வதி, ஐஸ்வர்யாவாக நடித்து வந்த ஐஸ்வர்யாவுக்கு பதில் ஜானு என தாராவாக நடித்து வந்த சிறுமிவரை பல நடிகர்கள் மாற்றம் நடைபெற்றுள்ளது.
இந்நிலையில் விசாலாட்சி கதாபாத்திரத்தில் நடித்து வந்த சத்யாப்ரியா தனது இன்ஸ்டாகிராமில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், 'நான் எதிர்நீச்சல் தொடரில் நடிக்கவில்லை என்றால் யாராவது வருத்தப்படுவீர்களா? யார் என்னை மிஸ் செய்ய போகிறீர்கள்' என்று கேட்டிருந்தார். இதனைதொடர்ந்து ரசிகர்கள் பலரும் சத்யப்ரியா நடிக்க வேண்டும் என்று கேட்க, அடுத்ததாக வெளியிட்டுள்ள பதிவில் நான் இல்லாமல் எதிர்நீச்சல் சீரியலா? என கெத்தாக கேட்டுள்ளார். இதன்மூலம் விசாலாட்சி கதாபாத்திரத்தில் சத்யப்ரியா தொடர்ந்து நடிக்கிறார் என்பது உறுதியாகியுள்ளது.