சினிமா துறை நாறிப் போய் உள்ளது : சனம் ஷெட்டி கோபம் | பேட் மேன் பட நடிகர் வால் கில்மர் காலமானார் | குட் பேட் அக்லி படத்தின் ரன்னிங் டைம் வெளியானது | 29 வயதா.... நம்பமுடியவில்லை என்கிறார் ராஷ்மிகா | ஹிப் ஹாப் ஆதியின் படத்தை இயக்கும் ஜோ இயக்குனர் | காதல் பிரேக்கப்பிற்கு சானியா ஐயப்பன் சொன்ன அதிர்ச்சி காரணம் | முன்கூட்டியே ரிலீசாகும் மோகன்லாலின் தொடரும் படம் | எம்புரான் டைட்டில் : நன்றி கார்டில் சுரேஷ்கோபி பெயர் நீக்கம் | வீர தீர சூரன் வெற்றி : வின்டேஜ் புகைப்படம் பகிர்ந்த துருவ் விக்ரம் | பெண் விரிவுரையாளருக்கு 2.68 லட்சம் நஷ்ட ஈடு வழங்க மோகன்லால் பட தயாரிப்பாளருக்கு நீதிமன்றம் உத்தரவு |
80கள் 90கள் காலக்கட்டத்தில் கொடிக்கட்டி பறந்த ஆனந்த் பாபு ஒரு விபத்திற்கு பின் சினிமாவிலிருந்து விலகியிருந்தார். சின்னத்திரையில் மெளனராகம் தொடர் அவருக்கு நல்லதொரு கம்பேக்காக இருந்தது. அதனை தொடர்ந்து முத்தழகு, மெளனராகம் 2, கிழக்கு வாசல் தொடரில் நடித்திருந்த அவர் தற்போது விஜய் டிவியில் புதிதாக ஒளிபரப்பாக உள்ள பூங்காற்று திரும்புமா தொடரின் மூலம் மீண்டும் முக்கிய கதாபாத்திரத்தில் கம்பேக் கொடுத்துள்ளார். சினிமாவில் கோட்டைவிட்டாலும் சீரியலில் செகண்ட் இன்னிங்சை தொடங்கிய ஆனந்த் பாபுவிற்கு ரசிகர்களும் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.