ரோட்டர்டாம் திரைப்பட விழாவிற்கு செல்லும் ‛மயிலா' | ரஜினி - கமல் இணையும் படம் குறித்து அப்டேட் கொடுத்த சவுந்தர்யா ரஜினி - ஸ்ருதிஹாசன்! | சமந்தாவின் 'மா இண்டி பங்காரம்' படப்பிடிப்பு தொடங்கியது! | கரூர் சம்பவம் தொடர்பாக விஜய்யை விமர்சித்தாரா சூரி? -அவரே கொடுத்த விளக்கம் | பிரபாஸ் படத்தில் நடிக்கும் பழம்பெரும் நடிகை காஞ்சனா | 'காந்தாரா சாப்டர் 1' படத்திற்கு அல்லு அர்ஜுன் பாராட்டு | விஷ்ணு விஷால் என் என்ஜினை ஸ்டார்ட் செய்து வைத்தார் : கருணாகரன் | ஒரே ஆண்டில் தமிழில் இரண்டு வெற்றிப் படங்களில் அனுபமா பரமேஸ்வரன் | மாஸ்க் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | ஓடிடியில் அடுத்த வாரம் வரும் 'லோகா' |

பிரபல சின்னத்திரை தொகுப்பாளரான மா.கா.பா ஆனந்த் மீது அளிக்கப்பட்ட புகாரின் பேரில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி வருகிறது. திருச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் மா.கா.பா ஆனந்த் தொகுப்பாளராக பங்கேற்றுள்ளார். அந்த நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர்கள் உடற்பயிற்சி விழிப்புணர்வு செய்யப்போவதாக அனுமதி வாங்கிவிட்டு, ஸ்ட்ரீட் டே கொண்டாட ஏற்பாடு செய்ததாகவும் அதுவும் கடைசி சமயத்தில் நிறுத்தப்பட்டதாகவும் தெரிய வருகிறது.
இதனால் ஏமாந்து போன மக்கள் நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர்கள், தொகுப்பாளர் மா.கா.பா ஆனந்த் உட்பட 50 பேர் மேல் போலீஸில் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.




