கடன் பிரச்னை இருந்தாலும் நிம்மதியாக தூங்குகிறேன்: சேரன் பேச்சு | 100 முறை ஆர்ஆர்ஆர் பார்த்தேன் : ராம்சரணின் வீட்டிற்கே வந்து நெகிழ்ந்த ஜப்பான் ரசிகை | நடிகை ஹேமா மீதான போதைப்பொருள் வழக்கு ரத்து | படம் ரிலீஸ் : சிறையில் இருந்தபடி ரசிகர்களுக்கு நடிகர் தர்ஷன் கோரிக்கை | உள்ளாட்சித் தேர்தலில் ஓட்டளிக்க முடியாத மம்முட்டி | மலையாள திரைப்பட விழா நடுவர் மீது பாலியல் புகார் | மகன் மற்றும் நிவின்பாலியுடன் தனி விமானத்தில் பயணித்த மோகன்லால் | உயர் நீதிமன்றத்திலும் நடந்ததை சொல்வேன் : நடிகை வழக்கு குறித்து நடிகர் லால் திட்டவட்டம் | பிளாஷ்பேக்: வில்லனையும், நாயகியையும் முன்னிறுத்திய எம்ஜிஆர் | பிளாஷ்பேக்: முத்தான மூன்று சுப்புலக்ஷ்மிகளை வெள்ளித்திரைக்குத் தந்த இயக்குநர் கே சுப்ரமணியம் |

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் செல்லம்மா தொடரில் ஹீரோயினாக நடித்து வந்தார் அன்ஷிதா. சில மாதங்களுக்கு முன் இந்த தொடர் முடிவுக்கு வந்த நிலையில், குக் வித் கோமாளி சீசன் 5-ல் கோமாளியாக களமிறங்கினார். அன்ஷிதாவிற்கு தமிழகத்தில் ஏராளமானோர் ரசிகர்களாக உள்ளனர். அவரது சோஷியல் மீடியா பதிவுகளுக்கும் அதிக வரவேற்பு கிடைத்து வருகிறது.
இந்நிலையில், அன்ஷிதா ஒருவருடன் கையை கோர்த்துக்கொண்டிருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு 'புயலால் கூட நமது உறவை அசைக்க முடியாது' என்று பதிவிட்டுள்ளார். இதனையடுத்து யார் அந்த காதலர்? என்று கேட்டுக்கொண்டிருக்கின்றனர். சிலர் அது செல்லம்மா தொடரில் ஹீரோவாக நடித்த அன்வர் தான் என்றும் கமெண்ட் செய்து வருகின்றனர்.