'இட்லி கடை' படத்தின் முதல் பாதி ரெடி! | 'தேரே இஸ்க் மெயின்' படத்தில் பிரபுதேவா? | ரஜினியின் 'கூலி' படத்தின் ஹிந்தி பதிப்புக்கு டைட்டில் மாற்றம்! | தலையில் மொட்டை அடித்து கெட்டப்பை மாற்றிய அஜித்குமார்! | கொக்கைன் விவகாரத்தில் நடிகர் கிருஷ்ணாவுக்கு சம்மன் | சிம்புவின் 50வது படம் டிராப்பா? | ரசிகர்கள் விரும்பும் படத்தை கொடுக்கவில்லை: 'தக் லைப்' தோல்விக்கு மன்னிப்பு கேட்ட மணிரத்னம் | ஆக் ஷன் ஹீரோக்கள் மீதான மரியாதை அதிகரித்துள்ளது : கஜோல் | 'கேம் சேஞ்ஜர்' படத்துக்கு பச்சைக்கொடி காட்டியிருக்க கூடாது: தயாரிப்பாளர் தில் ராஜூ புலம்பல் | தமிழ்த் தலைப்புகளும், ஆங்கிலத் தலைப்புகளும் மோதும் ஜுன் 27 ரிலீஸ் |
பாக்கியலெட்சுமி தொடரில் தாத்தா ராமமூர்த்தியாக ரோசரி நடித்து வருகிறார். தற்போது இவரது கதாபாத்திரம் இறப்பது போல் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. நன்றாக தானே சென்று கொண்டிருக்கிறது. ஏன் ராமமூர்த்தியை கொன்றுவிட்டார்கள் என ரசிகர்கள் பலரும் கேள்வி எழுப்பி வந்த நிலையில், தற்போது அந்த கதாபாத்திரத்தில் நடித்து வந்த ரோசரியே பேட்டி அளித்துள்ளார். அவர் கூறுகையில், 'நல்ல பாசிட்டிவான கதாபாத்திரம் தான். தொடர் இறுதிக்கட்டத்தை நெருங்குவதால் கதைப்படி ராமமூர்த்தி கதாபாத்திரமும் முடிவு பெறுகிறது. அதனால் ஓகே என்று சொல்லிவிட்டேன். இறுதிசடங்கு காட்சிக்காக இறுதிசடங்கை ரியலா பண்ணனும் சொன்னாங்க. ராமமூர்த்திக்கு இறுதிசடங்கு பண்றாங்கன்னு எடுத்துக்கிட்டேன். அது நடிப்பு அவ்ளோ தான்' என்று கூறியுள்ளார்.