அவதார் 3 ரிலீஸ் : ஒதுங்கும் தமிழ்ப் படங்கள் | விஜயகாந்தின் நல்ல மனசு : சரத்குமார் உருக்கம் | அப்பா ரஜினி படத்தை இயக்குகிறேனா? : மகள் சவுந்தர்யா சொன்ன பதில் | இளையராஜாவும், யுவுனும் இணைந்து பாடிய அம்மா சென்டிமென்ட் பாடல் | பொங்கலுக்கு இத்தனை பான் இந்தியா படங்கள்? தாங்குமா தியேட்டர்கள் ? | வார்த்தை விட்டு மாட்டிக்கொண்ட ராதிகா ஆப்தே! | தெலுங்கில் டப் செய்யப்படும் ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | ஜனவரி 9ம் தேதி விஜய்யின் ஜனநாயகனுடன் மோதுகிறதா பராசக்தி? | திருமணத்திற்கு பிறகு மும்பையில் குடியேறிய சமந்தா! | 'ஜனநாயகன்' டிக்கெட் முன்பதிவு தொடங்கியது! ஜெர்மனியில் 5.5 லட்சம் வரை வசூல்!! |

பாக்கியலெட்சுமி தொடரில் தாத்தா ராமமூர்த்தியாக ரோசரி நடித்து வருகிறார். தற்போது இவரது கதாபாத்திரம் இறப்பது போல் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. நன்றாக தானே சென்று கொண்டிருக்கிறது. ஏன் ராமமூர்த்தியை கொன்றுவிட்டார்கள் என ரசிகர்கள் பலரும் கேள்வி எழுப்பி வந்த நிலையில், தற்போது அந்த கதாபாத்திரத்தில் நடித்து வந்த ரோசரியே பேட்டி அளித்துள்ளார். அவர் கூறுகையில், 'நல்ல பாசிட்டிவான கதாபாத்திரம் தான். தொடர் இறுதிக்கட்டத்தை நெருங்குவதால் கதைப்படி ராமமூர்த்தி கதாபாத்திரமும் முடிவு பெறுகிறது. அதனால் ஓகே என்று சொல்லிவிட்டேன். இறுதிசடங்கு காட்சிக்காக இறுதிசடங்கை ரியலா பண்ணனும் சொன்னாங்க. ராமமூர்த்திக்கு இறுதிசடங்கு பண்றாங்கன்னு எடுத்துக்கிட்டேன். அது நடிப்பு அவ்ளோ தான்' என்று கூறியுள்ளார்.




