ராமாயணா டைட்டில் வீடியோ 9 நகரங்களில் வெளியாகிறது | நிவின் பாலி ஜோடியாக ப்ரீத்தி முகுந்தன் | 'எம்ஜிஆரின் பரிசுத்த நினைப்பே படத்தின் தலைப்பு'... “திருடாதே” | தெலுங்கில் லாபக் கணக்கை ஆரம்பித்த 'குபேரா' | சிம்பு - வெற்றிமாறன் படத்தின் அடுத்த அப்டேட் ? | தமிழ் இயக்குனர் ஷங்கரை மீண்டும் விமர்சிக்கும் தெலுங்கு சினிமா | பாலாஜி மோகன் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ் | வார் 2 : ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆர் இடையே நடன போட்டி? | போலீஸாக நடிக்கும் கவுதம் ராம் கார்த்திக் | கண்ணப்பா படத்திற்கு அடித்த ஜாக்பாட் |
கன்னட திரைப்பட நடிகையான சுப ரக்ஷா ‛கார்த்திகை தீபம்' தொடரின் மூலம் தமிழ் சின்னத்திரையில் என்ட்ரி கொடுத்தார். இந்த தொடரில் வில்லியாக மிரட்டி வந்த இவரது நடிப்புக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் பாராட்டுகளும் கிடைத்து வந்தது. அண்மையில் இலங்கையில் நடைபெற்ற ‛ஆசிய ஐகான் விருது' நிகழ்விலும் சுப ரக்ஷாவுக்கு சிறந்த மாடல் மற்றும் நடிகைக்கான விருது கிடைத்தது.
இந்நிலையில், கார்த்திகை தீபம் தொடரிலிருந்து சுப ரக்ஷா திடீரென விலகினார். அவருக்கு பதிலாக தற்போது சாந்தினி பிரகாஷ் நடித்து வருகிறார். சுப ரக்ஷா எதற்காக சீரியலை விட்டு விலகினார் என ரசிகர்கள் பலரும் கேள்வி எழுப்ப, தற்போது அதற்கு பதிலளித்துள்ள சுப ரக்ஷா, 'ரசிகர்களின் அன்பை பெற்றதற்கு நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். தற்போது கன்னடத்தில் படம் ஒன்றில் கமிட்டாகியிருப்பதால் கார்த்திகை தீபம் தொடரிலிருந்து விலகி இருக்கிறேன். விரைவிலேயே புதிய சீரியலில் உங்களை சந்திக்கிறேன்' என்று கூறியுள்ளார்.