ஹிந்தி பட வசூலில் நம்பர் 1 சாதனை புரிந்த 'ஸ்திரீ 2' | தனுஷ் இயக்கி, நடிக்கும் இட்லி கடை | ரஜினிகாந்த் - அனிருத் கூட்டணியின் 4வது இசை வெளியீடு | மழைக்காலத்தில் சிக்குகிறதா 'கங்குவா'? | நாளை 'வேட்டையன்' விழா : கதை சொல்வாரா ரஜினிகாந்த் ? | விஜய்யின் இரண்டாவது 400 கோடி படம் 'தி கோட்' | சிவகார்த்திகேயனை தவிப்பில் விட்ட ஏஆர் முருகதாஸ் | அஜித்துடன் நடந்த 10 நொடி சந்திப்பு : கவின் | விஜய்க்கு வில்லனாக பிரபல பாலிவுட் நடிகர் | நாளை வெளியாகும் வேட்டையன் படத்தின் இரண்டாம் பாடல் |
கன்னட திரைப்பட நடிகையான சுப ரக்ஷா ‛கார்த்திகை தீபம்' தொடரின் மூலம் தமிழ் சின்னத்திரையில் என்ட்ரி கொடுத்தார். இந்த தொடரில் வில்லியாக மிரட்டி வந்த இவரது நடிப்புக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் பாராட்டுகளும் கிடைத்து வந்தது. அண்மையில் இலங்கையில் நடைபெற்ற ‛ஆசிய ஐகான் விருது' நிகழ்விலும் சுப ரக்ஷாவுக்கு சிறந்த மாடல் மற்றும் நடிகைக்கான விருது கிடைத்தது.
இந்நிலையில், கார்த்திகை தீபம் தொடரிலிருந்து சுப ரக்ஷா திடீரென விலகினார். அவருக்கு பதிலாக தற்போது சாந்தினி பிரகாஷ் நடித்து வருகிறார். சுப ரக்ஷா எதற்காக சீரியலை விட்டு விலகினார் என ரசிகர்கள் பலரும் கேள்வி எழுப்ப, தற்போது அதற்கு பதிலளித்துள்ள சுப ரக்ஷா, 'ரசிகர்களின் அன்பை பெற்றதற்கு நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். தற்போது கன்னடத்தில் படம் ஒன்றில் கமிட்டாகியிருப்பதால் கார்த்திகை தீபம் தொடரிலிருந்து விலகி இருக்கிறேன். விரைவிலேயே புதிய சீரியலில் உங்களை சந்திக்கிறேன்' என்று கூறியுள்ளார்.