புஷ்கர் - காயத்ரி அடுத்த படத்தில் சிவகார்த்திகேயன்? | செல்வராகவன் நடிக்கும் புதிய பட அறிவிப்பு! | பைசன் படம் குறித்து இயக்குனர் ராம் வெளியிட்ட தகவல் | ஒர்க் அவுட்டின்போது டிரெண்டிங் பாடலுக்கு நடனமாடிய மிருணாள் தாக்கூர் | ஓடிடியில் வெளியான கமலின் தக் லைப் | சிம்பு படத்தில் சிவராஜ்குமார் இணைகிறாரா? | ஹாரிஸ் ஜெயராஜை கவுரவப்படுத்திய கனடா அரசாங்கம் | அஜித்திடம் ஏமாற்றத்தை வெளிப்படுத்திய விஷ்ணு மஞ்சு | எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‛ராமாயணா' : அறிமுக வீடியோ வெளியீடு | மார்கோ 2 நிச்சயம் உருவாகும் : உன்னி முகுந்தன் விலகிய பிறகும் உறுதியாக நிற்கும் தயாரிப்பாளர் |
விஜய் டிவியில் ஒளிபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் மூலம் அதிக புகழை பெற்றவர் வீஜே தீபிகா. மீடியாவில் பயணிக்க வேண்டும் என்ற ஆசையில் வீஜேவாக நுழைந்து அதன்பின் சிறு சிறு கதாபாத்திரங்களில் சீரியல்களில் தோன்றிய அவர், தற்போது தமிழ்நாட்டு ரசிகர்களின் பேவரைட் நடிகையாக மாறிவிட்டார்.
இந்நிலையில், அவர் நடிக்க வந்த புதிதில் பட்ட அவமானங்களையும் கஷ்டங்களையும் பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார். அந்த பேட்டியில், 'நான் திருநெல்வேலியில் இருந்து வந்ததால் அந்த ஊர் பாஷையில் தான் பேச வரும். இதனாலேயே என்னை ரிஜெக்ட் செய்தார்கள். பல போராட்டங்களுக்கு பிறகு சந்திரமதி சீரியலில் சிறு ரோல் கிடைத்தது. அதுவும் சில நாட்களுக்கு மட்டும் தான். கொரோனா காலக்கட்டத்தில் சுந்தரி நீயும் சுந்தரன் நானும் சீரியல் வாய்ப்பு கிடைத்தது. அப்போது திடீரென லாக்டவுடன் போட்டார்கள். ஊருக்கு போய்விட்டால் நம்முடைய ரோலை மாற்றிவிடுவார்களோ என்று பயந்து சென்னையிலேயே தங்கிவிட்டேன். அதேசமயம் வருமானம் இல்லாமல் கையில் பணம் இல்லாமல் வாடகை கொடுக்க முடியாமல் கஷ்டப்பட்டேன். சாப்பிட கூட வழியில்லாமல் நடுத்தெருவில் நின்று அழுதிருக்கிறேன். அதெல்லாம் என் வாழ்நாளில் மறக்கமுடியாத நாட்கள்' என உருக்கமாக கூறியுள்ளார்.