‛கில்லர்' முதல்கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு ‛ஜெயிலர்-2'வில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | காரில் கோளாறு: ஷாரூக்கான், தீபிகா படுகோனே மீது வழக்கு | ‛வார் - 2' படம் தோல்வி அடைந்ததால் ஜூனியர் என்டிஆரின் அடுத்த படத்தை கைவிட்ட நிறுவனம்! | எனது சொகுசு பங்களா வீடியோவை உடனே நீக்குங்கள்! - ஆலியா பட் வைத்த ஆவேச கோரிக்கை | 23 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் ‛ரன்' | சிவகார்த்திகேயனுக்கு போட்டியா : ‛கேபிஒய்' பாலா பதில் | பிளாஷ்பேக்: திகைக்க வைக்கும் 'த்ரில்லர்' திரைப்படத்தின் நாயகனாக எம் என் நம்பியார் நடித்த “திகம்பர சாமியார்” | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் ‛பர்ஸ்ட் பன்ச்' எப்படி இருக்கு? | மகுடம் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது! | ஷாலின் சோயாவின் இயக்குனர் ஆசை! |
விஜய் டிவியில் ஒளிபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் மூலம் அதிக புகழை பெற்றவர் வீஜே தீபிகா. மீடியாவில் பயணிக்க வேண்டும் என்ற ஆசையில் வீஜேவாக நுழைந்து அதன்பின் சிறு சிறு கதாபாத்திரங்களில் சீரியல்களில் தோன்றிய அவர், தற்போது தமிழ்நாட்டு ரசிகர்களின் பேவரைட் நடிகையாக மாறிவிட்டார்.
இந்நிலையில், அவர் நடிக்க வந்த புதிதில் பட்ட அவமானங்களையும் கஷ்டங்களையும் பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார். அந்த பேட்டியில், 'நான் திருநெல்வேலியில் இருந்து வந்ததால் அந்த ஊர் பாஷையில் தான் பேச வரும். இதனாலேயே என்னை ரிஜெக்ட் செய்தார்கள். பல போராட்டங்களுக்கு பிறகு சந்திரமதி சீரியலில் சிறு ரோல் கிடைத்தது. அதுவும் சில நாட்களுக்கு மட்டும் தான். கொரோனா காலக்கட்டத்தில் சுந்தரி நீயும் சுந்தரன் நானும் சீரியல் வாய்ப்பு கிடைத்தது. அப்போது திடீரென லாக்டவுடன் போட்டார்கள். ஊருக்கு போய்விட்டால் நம்முடைய ரோலை மாற்றிவிடுவார்களோ என்று பயந்து சென்னையிலேயே தங்கிவிட்டேன். அதேசமயம் வருமானம் இல்லாமல் கையில் பணம் இல்லாமல் வாடகை கொடுக்க முடியாமல் கஷ்டப்பட்டேன். சாப்பிட கூட வழியில்லாமல் நடுத்தெருவில் நின்று அழுதிருக்கிறேன். அதெல்லாம் என் வாழ்நாளில் மறக்கமுடியாத நாட்கள்' என உருக்கமாக கூறியுள்ளார்.