சூர்யாவின் ‛விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' டீசர் வெளியீடு | சிம்புவுக்கு ஜோடியாகும் மமிதா பைஜு | சென்னையில் நாளை ஜனநாயகன் மறு தணிக்கை நடக்கிறது | பவன் கல்யாணை பாராட்டும் ஸ்ரீலீலா | 'மாத்ருபூமி' ஆக மாறிய 'பேட்டில் ஆப் கல்வான்' | முன்பதிவில் 120 கோடி வசூல் கடந்த 'துரந்தர் 2' | கைவசம் பல படங்கள் : வெற்றிக்காக ஏங்கும் ஜெய் | அரசியலுக்கு வருவாரா திரிஷா? | அஜித் இயக்குனர்கள் ரெடி : ஆனா தயாரிப்பாளர் எங்கே | ஆயிரம் நடன கலைஞர்களுடன் உருவான பிரமாண்ட பக்தி பாடல் |

சின்னத்திரை நடிகை பாவ்னி ரெட்டி முதல் கணவரை இழந்த சோகத்திலிருந்து பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு மீண்டு அதன்பின் புது வாழ்வை தொடங்கியிருக்கிறார். பிக்பாஸ் ஹவுஸ்மேட்டான அமீரின் காதலை ஏற்றுக்கொண்ட பாவ்னி அவருடன் தற்போது லிவிங் ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் அண்மையில் அவர் அளித்துள்ள பேட்டியில், 'எனக்கு ஒருவரை பிடித்துவிட்டது என்றால் அவர்களுக்காக எதையும் செய்யக்கூடியவள். அவர்கள் மட்டும் தான் என்னுடைய உலகம் என்று வாழ்ந்து கொண்டிருப்பேன். அப்படிப்பட்டவர்கள் என்னுடைய வாழ்க்கையில் இல்லாமல் போய்விட்டால் நான் எவ்வளவு வேதனை பட்டிருப்பேன். ஆனால், சிலர் அதை அசால்ட்டாக கேவலப்படுத்தி கமெண்ட் போடுகிறார்கள். நானே என் கணவரை கொன்றுவிட்டதாக சொல்கிறார்கள். அதுபோல இப்போது அமீரை எப்போது கொல்ல போகிறாய்? என்று கேட்கிறார்கள்' என வேதனையுடன் பேசியுள்ளார்.