விஜய் சேதுபதியின் தங்கை கதாபாத்திரம்: நடிகை ரோஷினி நெகிழ்ச்சி | கோட்டா சீனிவாச ராவ் மறைவு: தெலுங்கு சினிமா பிரபலங்கள் இரங்கல் | வலிகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை! அனுபவம் பேசும் கவிஞர் பா.விஜய் | இயக்குனரிடம் நிபந்தனை போட்ட அமரன் | சம்பளம் உயர்த்தியதால் ‛யுடர்ன்' போடும் தயாரிப்பாளர்கள் | வில்லி கிடைத்தால் சொல்லியடிப்பேன்: 'தில்' காட்டும் நடிகை திவ்யா | நிழல் உலகில் நனவான தச்சனியின் கனவு | பிளாஷ்பேக்: இளையராஜா, கண்ணதாசன், எஸ் பி பி மூவரையும் முதன் முதலில் இணைத்த “பாலூட்டி வளர்த்த கிளி” | 75 வயதில் பிளஸ் டூ தேர்வு எழுத தயாரான மலையாள நடிகை | 20 வருடமாக நானும் ஹனிரோஸும் இப்போதும் பேச்சுலர்ஸ் தான் : உருகும் மலையாள நடிகர் |
பிரபல நடிகரான பிர்லா போஸ் சினிமா மற்றும் சின்னத்திரையில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். சென்னையில் அப்பார்ட்மென்ட்டில் தனது குடும்பத்துடன் வசித்து வரும் இவரது மகனை கும்பல் ஒன்று கடத்திச் சென்று அடித்து துன்புறுத்தியுள்ளது. இந்த விவகாரம் தற்போது போலீஸ் புகாராக மாறியுள்ள நிலையில் அதிர்ச்சியளிக்கும் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது பிர்லா போஸின் காரை அதே அப்பார்ட்மெண்டில் வசித்து வரும் இளைஞர் ஒருவர் சில தினங்களுக்கு முன் மோதி சேதப்படுத்தியுள்ளார்.
இது தொடர்பாக பிர்லா போஸுக்கும் அந்த இளைஞருக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தில் பிர்லா போஸை எப்படியாவது பழி வாங்க வேண்டும் என்று அந்த இளைஞர் முடிவு செய்துள்ளார். எனவே, பிர்லா போஸ் வீட்டில் இல்லாத நேரமாக பார்த்து 10 பேருடன் சேர்ந்து அவரது மகனை கடத்திச் சென்று அடித்து துன்புறுத்தி மீண்டும் வீட்டிலேயே விட்டு சென்றுள்ளார். பிர்லா போஸ் போலீஸாரிடம் அளித்துள்ள புகாரின் பேரில் குற்றச்செயலில் ஈடுபட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.