விஜய் தரப்பின் பிரஷரால் வேகம் எடுக்கும் 'ஜனநாயகன்' | எனக்குள் அந்த தீ எரியும் வரை சினிமாவில் நடித்துக்கொண்டே இருப்பேன்! - கமல்ஹாசன் சொன்ன பதில் | தயாரிப்பாளர் ராஜேஷ் நடிக்கும் படத்தின் டைட்டில் 'அங்கீகாரம்'! பர்ஸ்ட் லுக் வெளியானது!! | 50வது படத்தில் வித்தியாசமான திருநங்கை வேடம்! - சிம்பு வெளியிட்ட தகவல் | கேன்ஸில் பிரதிபலித்த ‛சிந்தூர்' : பார்வையாளர்களை கவர்ந்த ஐஸ்வர்யா ராய், அதிதி ராவ் | காந்தாரா சாப்டர் 1 ரிலீஸ் தள்ளிவைப்பா... : ரிஷப் ஷெட்டி பதில் | குத்துப்பாடலில் சர்ச்சையான வரிகளை நீக்க சொன்ன பவன் கல்யாண் ; மரகதமணி தகவல் | பண மோசடி வழக்கில் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' தயாரிப்பாளர்களின் கோரிக்கை மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | ஏகப்பட்ட நிபந்தனைகள் விதித்த தீபிகா படுகோனே : வெளியேறவில்லை.. வெளியேற்றப்பட்டார் | போலீஸ் பாதுகாப்பை மீறி சல்மான் கான் வீட்டுக்கு செல்ல முயன்ற பெண் கைது |
'பிக் பாஸ்' நிகழ்ச்சியின் 7வது சீசன் சமீபத்தில் நிறைவடைந்தது. ஒவ்வொரு முறையும் 'பிக் பாஸ்' டைட்டில் வென்றவர்கள் குறித்து விமர்சனம் வருவது வழக்கம். இந்த முறை கமல் மீதே விமர்சனம் வந்தது. தனது படத்தில் நடித்த நடிகைகளுக்கு அவர் ஆதரவாக இருந்தார் என்று கூறப்பட்டது. நிகழ்ச்சிக்கு பிறகு 'பிக் பாஸ்' பட்டம் வென்ற அர்ச்சனா மீது விமர்சனம் எழுந்தது. அவர் பலருக்கு பணம் கொடுத்து டீம் ஒர்க் மூலம் தனக்கு வாக்களிக்க வைத்ததாக அந்த குற்றச்சாட்டு இருந்தது. அதாவது பணம் கொடுத்துதான் பட்டம் வென்றார் என்று கூறப்பட்டது.
இதுகுறித்து இதுவரை மவுனமாக இருந்த அர்ச்சனா, இப்போது அதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறும்போது “பிக் பாஸ் நிகழ்ச்சியில் வெற்றி பெற்றதற்காக எனக்கு 50 லட்சம் ரூபாய் பரிசு கொடுத்திருக்கிறார்கள். அதேசமயத்தில் நான் பணம் கொடுத்துதான் வெற்றி பெற்றேன் என சலசலப்பும் வந்திருக்கிறது. எனக்கு 19 கோடி பேர் ஓட்டளித்துள்ளனர். ஒரு ஓட்டுக்கு 1 ரூபாய் என்று வைத்தால் கூட 19 கோடி வரும். இவ்வளவு பணத்திற்கு நான் எங்கு போவேன்? இவ்வளவு ரூபாய் செலவு செய்து பிக் பாஸ் டைட்டில் பட்டத்தை வாங்குவதற்கு பதிலாக 1 கோடி ரூபாய் வைத்து ஒரு படத்தை இயக்கி நான் ஹீரோயினாக நடித்து விடுவேன். அதனால், இதெல்லாம் சுத்தப் பொய். நான் மக்கள் ஆதரவில்தான் ஜெயித்தேன்” என்று கூறியுள்ளார்.