தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? | பிளாஷ்பேக்: உண்ணாவிரதம் இருந்து வெள்ளித்திரையின் உச்சம் தொட்ட பி யூ சின்னப்பா | 4 ஆண்டுகளை நிறைவு செய்த 'மாநாடு' | உங்கள் அறிவுரை தேவைப்படும்போது பெற்றுக் கொள்கிறேன் : ரசிகருக்கு சமந்தா பதில் | தெலுங்கு படமாக இருந்தாலும் கன்னடத்துக்கு முக்கியத்துவம் வேண்டும் : உபேந்திரா | கோவா திரைப்பட விழாவில் சென்னை மாணவியின் ஏஐ படம் | காதலில் விழுந்தாரா 'காந்தா' நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ் | வெப் தொடரில் லட்சுமி பிரியா |

நடிகை காஜல் பசுபதியை தெரியாதவர்களே இருக்க முடியாது. சொர்ணாக்கா கதாபாத்திரத்திற்கு பொருத்தமான காஜல் பசுபதி பெண் ரவுடி, தீவிரவாதி என பல மிரட்டலான கதாபாத்திரங்களில் நடித்து கலக்கியிருக்கிறார். தவிர சமூக வலைதளங்களிலும் பல பிரச்னைகள் குறித்து தைரியமாக தனது கருத்தினை பதிவிட்டு வருகிறார். இவரது நேர்மையான குணத்திற்காகவே பலரும் இவரது ரசிகர்களாக இருந்து வருகின்றனர். சாண்டி மாஸ்டருடனான முதல் திருமணம் விவாகரத்தில் முடிந்த பின் இன்றளவும் சிங்கிளாக இருந்து வருகிறார் காஜல் பசுபதி. இவரை பலரும் மறுமணம் செய்ய சொல்லி வற்புறுத்தியும் சிலர் நேரடியாகவே லவ் ப்ரொபோஸ் செய்தும் வந்தனர்.
இந்நிலையில், இவர் தனது இன்ஸ்டாகிராமில் தாலிக்கட்டுவது போன்ற புகைப்படத்தை வெளியிட்டு, 'ஒருவழியாக இரண்டாம் திருமணம் முடிந்துவிட்டது. திடீரென முடிவு செய்ததால் யாருக்கும் சொல்ல முடியவில்லை' என்று பதிவிட்டுள்ளார். இதைபார்த்த ரசிகர்கள் பலரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். ஆனால், அதேசமயம் காஜல் வெளியிட்டுள்ள புகைப்படம் பார்ப்பதற்கு பழைய புகைப்படமாக இருப்பதால் நிச்சயமாக இது பொய் தான் காஜல் விளையாடுகிறார் என்றும் கமெண்ட் செய்து வருகின்றனர்.