ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'சிறகடிக்க ஆசை' தொடர் டி.ஆர்.பி.,யில் நல்ல முன்னேற்றம் கண்டு வருகிறது. இந்த தொடரில் பார்வதி என்ற கதாபாத்திரத்தில் நடிகை பாக்யஸ்ரீ நடித்து வருகிறார். தமிழ், மலையாளம், தெலுங்கு படங்களில் நடித்துள்ள பாக்யஸ்ரீ, தமிழில் தேவியின் திருவிளையாடல் படத்தில் தான் அறிமுகமானார்.
தனது திரையுலக அனுபவம் குறித்து அண்மையில் பகிர்ந்து கொண்ட அவர், 14 வயதிலேயே சினிமாவில் நடிக்க வந்ததாகவும், அப்போது உடல் கொஞ்சம் பெரிய பெண் போல் இருக்க வேண்டுமென ஊசி போட்டுக்கொண்டதாகவும் கூறினார். மேலும், அதற்காக அப்போது போட்டுக்கொண்ட ஊசியால் தனது கர்ப்ப காலத்தின் போது பின் விளைவுகள் ஏற்பட்டதாகவும் கூறியுள்ளார்.